Raga: வசந்தா | Tala: ஆதி பல்லவி:இல்லாளை அஞ்சி ஏனோ வாழ்கின்றாய் நீ
இப்படியுமா உலகில் ஏழையாகித் தாழ நின்றாய்
அநுபல்லவி:நல்லார்க்கு நல்ல செயல் செய்திடவும் அஞ்சுகின்றாய்
நாணிக் கோணி மனையாளை நாளும் நாளும் கெஞ்சு கின்றாய்
சரணம்:பட்டம் பெற்றாலும் என்ன பதவியில் உயர்ந்தும் என்ன
பாரினில் தேவரைப் போல் பாங்குடன் வாழ்ந்தும் என்ன
நட்டார் குறை முடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகுபவர் பேரே கெடும் இதனால்
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்தெனும் குறள் சொல்லிதை
எண் சேர்ந்த நெஞ்சத் திடனுடையாரைச் சேர்ந்திடுக
பெண்சேர்ந்த பேதைமையை இன்றே நீ கைவிடுக