மூலிகை மரமானது இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றை மருந்துக்காக கொடுக்கிறது. கடைசியில் தன்னைத் தாங்கும் வேரையும் பிடுங்கி கொள்ளவும் அனுமதிக்கிறது.
அதுபோல, அறிவுடையோன், அன்புடையோன் ஆகியோரைவிட, பெருந்தன்மை உள்ளவனிடம் செல்வம் இருந்தால், பல வகையாலும் அவன் வேண்டியவர்க்கு உதவுவான். தனக்காக கூட எதையும் வைத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு அத்தகைய தியாக உள்ளம்!
கர்ணன், குமணன், சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் கதை நினைவுக்கு வருகிறது.
(காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உருவாவதற்காக, தம் பொருள் முழுவதையும் வழங்கியதோடு, தம்முடைய இல்லத்தையும் கொடுத்தார், வள்ளல் அழகப்பா என்று மக்கள் கூறுகிறார்கள். அவரைப் போல பலர் இருந்திருக்கக்கூடும்!)