കാര്യക്ഷമത

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.   (௬௱௬௰௧ - 661)
 

പണിപൂർത്തീകരിക്കാനായ് മുഖ്യമായ് വേണ്ട യോഗ്യത മനക്കരുത്താകും, മറ്റു ഗുണങ്ങൾ വേണ്ടതാകിലും (൬൱൬൰൧)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.   (௬௱௬௰௨ - 662)
 

ആവാത്തത് തുടങ്ങൊല്ല; വിഘ്നം കണ്ടു ഭയക്കൊലാ ദ്വിഗുണം വേണമെന്നല്ലോ പൂർവ്വ സൂരികൾ നിർണ്ണയം (൬൱൬൰൨)

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.   (௬௱௬௰௩ - 663)
 

പണി പൂർത്തിക്ക് മുൻലോക ശ്രദ്ധ പറ്റാതെ നോക്കണം മദ്ധ്യേ ശ്രദ്ധ പതിഞ്ഞീടിൽ വിഘ്നം പലതുനേരിടാം (൬൱൬൰൩)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.   (௬௱௬௰௪ - 664)
 

എങ്ങിനെ ചെയ്തു തീർക്കുമെന്നാരാലും ചൊല്ലസാദ്ധ്യമാം ഏളുതല്ലധികം പേർക്കും ചൊന്നപോൽ പണിതീർക്കുവാൻ (൬൱൬൰൪)

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.   (௬௱௬௰௫ - 665)
 

കർമ്മസാമർത്ഥ്യമൊന്നാലേ മേന്മലക്ഷ്യമിടുന്നവർ രാജശ്രദ്ധ പതിഞ്ഞീടാനുള്ളിലാശ വഹിച്ചിടും (൬൱൬൰൫)

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.   (௬௱௬௰௬ - 666)
 

കർമ്മധീരതയുണ്ടായാലുദ്ദിഷ്ട വിഷയങ്ങളിൽ ഉദ്ദേശിച്ചത് പോൽത്തന്നെ കാര്യപ്രാപ്തിയെളുപ്പമാം (൬൱൬൰൬)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.   (௬௱௬௰௭ - 667)
 

ലളിതവേഷത്താലാരും ചെറുതെന്ന് നിനക്കൊലാ പെരുതാം രഥചക്രത്തിലച്ചാണി ലഘുവല്ലയോ? (൬൱൬൰൭)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.   (௬௱௬௰௮ - 668)
 

മനോസ്ഥൈര്യത്തൊടും, ധൈര്യത്തൊടും വേലക്കൊരുങ്ങണം കാലവിളംഭം കൂടാതെ ശിഘ്രമായ് ചെയ്തു തീർക്കണം (൬൱൬൰൮)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.   (௬௱௬௰௯ - 669)
 

ഭാവി സംതൃപ്തി മോഹിച്ച് പ്രാരംഭവിഷമങ്ങളെ തൃണവൽ, ഗണ്യമാക്കാതെ ധൈര്യമായ് ചെയ്തു കൊള്ളണം (൬൱൬൰൯)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.   (௬௱௭௰ - 670)
 

തൊഴിൽ മഹത്വമോർക്കാതെ മരുവുന്ന ജനങ്ങളെ മറ്റുമേന്മയിരുന്നാലും ലോകം മാനിപ്പതില്ല കേൾ (൬൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: இந்துஸ்தான்பியாக்  |  തല: ரூபகம்
கண்ணிகள்:
உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்

கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்

வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22