അസൂയ

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.   (௱௬௰௧ - 161)
 

ഹീനമായ സ്വഭാവത്തിലേറെ നിന്ദ്യമസൂയയാം തദ്ദോഷം മനമേറാതെ കാത്തു സൂക്ഷിച്ചുകൊള്ളണം (൱൬൰൧)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.   (௱௬௰௨ - 162)
 

അസൂയാദോഷമേശാത്ത മനമേകന്നിരിക്കുകിൽ അതിന്നു സമമായുള്ള ഗുണം വേറില്ല നേടുവാൻ (൱൬൰൨)

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.   (௱௬௰௩ - 163)
 

ഇരുലോകനന്മക്കായിട്ടർത്ഥധർമ്മങ്ങളിൽ പ്രിയം ഇല്ലാത്തോനന്യരിൽ മേന്മ കണ്ടസൂയപ്പെടുന്നതാം (൱൬൰൩)

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.   (௱௬௰௪ - 164)
 

അസൂയാലുക്കളായുള്ളോർക്കിരുവീട്ടിലുമേർപ്പെടും ദുഃഖമെന്നറിയും നല്ലോരധർമ്മമൊഴിവാക്കിടും (൱൬൰൪)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.   (௱௬௰௫ - 165)
 

അസൂയാലുവിനായ് വേറെ ശത്രുവെന്തിന് ഭൂതലേ! ശത്രുചെയ്യുന്ന ദ്രോഹങ്ങളസൂയ തന്നെ ചെയ്തിടും (൱൬൰൫)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.   (௱௬௰௬ - 166)
 

അന്യർക്ക് ദയവായ് കിട്ടും സമ്പത്തിൽ വേദനിപ്പവൻ കുടുംബം പുടയും തീനുമില്ലാതെ നാശമായിടും (൱൬൰൬)

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.   (௱௬௰௭ - 167)
 

അസൂയക്കാരനെക്കണ്ടാൽ ലക്ഷ്മീദേവിക്കസൂയയാം അവനെക്കൈമാറും നേരം ദാരിദ്ര്യദേവിയേറ്റിടും (൱൬൰൭)

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.   (௱௬௰௮ - 168)
 

അസൂയക്കാരനാം പാപിക്കുള്ള സമ്പത്തുനഷ്ടമാം ലോകജീവിതവും ദുർമാർഗ്ഗത്തിലായിക്കഴിഞ്ഞിടും (൱൬൰൮)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.   (௱௬௰௯ - 169)
 

അസൂയ നൽകും സമ്പത്തും മനോശുദ്ധൻറെ ക്ഷാമവും മുജ്ജനമവിനയാലെന്നു പണ്ഡിതന്മാരറിഞ്ഞിടും (൱൬൰൯)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.   (௱௭௰ - 170)
 

അസൂയപ്പെട്ടതാലാരും ധന്യനായി ഭവിച്ചിടാ അസൂയതോന്നിയില്ലെങ്കിൽ ദാരിദ്ര്യം വന്നണഞ്ഞിടാ (൱൭൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: ஆபோகி  |  തല: ஆதி
பல்லவி:
அழுக்காறடையாதே - நண்பா
அழுக்காறடையாதே

அநுபல்லவி:
"அழுக்காறென்பதே ஒரு பாவி
திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்" அதனால்

சரணம்:
பொறாமை உள்ளவர் மனம் புகைந்திடும் கொள்ளி
புத்தியுள்ளோர் நகையாடுவர் எள்ளி
பெறாதிது நன்மதிப்பும் பெருங்குழி தள்ளி
பெருமை எல்லாம் கெடுக்கும் வறுமைநோய் அள்ளி

சஞ்சலமாகும் பொறாமையின் வீடு
சதிகாரர் நேசமே அவர்க்குடன்பாடு
கொஞ்சமோ இதனால் வந்திடும் கேடு
கூடாது இதைவிட்டே குறள்வழி நாடு




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22