നാട്

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.   (௭௱௩௰௧ - 731)
 

സമർത്ഥരാം‍ കൃഷിക്കാരും‍ വിജ്ഞരാം‍ സജ്ജനങ്ങളും‍ ഉദാരസമ്പന്നന്മാരും‍ ചേരുമ്പോൾ‍ നാടുനല്ലതാം‍. (൭൱൩൰൧)

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.   (௭௱௩௰௨ - 732)
 

എല്ലാവിധ വസ്‌തുക്കളും‍ ഹിതം‍പോലെ യഥേഷ്‌ഠമായ് കേടില്ലാതെ വിളഞ്ഞീടും‍ നാടുതാൻ‍ നല്ലതായിടും‍. (൭൱൩൰൨)

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.   (௭௱௩௰௩ - 733)
 

സമീപദേശത്തിൻ ഭാരം‍ വന്നാലുമവയെത്താങ്ങി രാജഭോഗം‍ പിഴക്കാതെ നല്ലനാട് കൊടുത്തിടും‍. (൭൱൩൰൩)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.   (௭௱௩௰௪ - 734)
 

കഠിനക്ഷാമവും‍, നീങ്ങാതെന്നും‍ നിൽക്കുന്നരോഗവും‍ നാശമേറ്റുന്ന ശത്രുവും‍ നാട്ടിലില്ലാതിരിക്കണം‍. (൭൱൩൰൪)

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.   (௭௱௩௰௫ - 735)
 

പലകൂട്ടങ്ങളും‍, നാട്ടിൽ ശല്യമാക്കുന്ന ശത്രുവും‍ കൊലചെയ്യും‍ ദുഷ്ടന്മാരും‍ നാട്ടിൽ‍ കാണാതിരിക്കണം‍. (൭൱൩൰൫)

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.   (௭௱௩௰௬ - 736)
 

ശത്രുവാൽ കേടുപറ്റാതെ, ക്ഷീണമാം‍ നാളിലും‍ വളം‍ കുറയാതെ, നിലനിൽല്‍ക്കും‍ നാടുസുന്ദരമായിടും‍. (൭൱൩൰൬)

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.   (௭௱௩௰௭ - 737)
 

ഉറവും‍ മഴയും‍ തക്ക മലയും‍ നദിയും‍ പുന ശക്തമാം‍ കോട്ടയും‍ നാട്ടിലുണ്ടാവലനിവാര്യമാം‍. (൭൱൩൰൭)

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.   (௭௱௩௰௮ - 738)
 

പൊതുജനാരോഗ്യം‍, സമ്പൽ സമൃദ്ധി, കൃഷിവൃദ്ധിയും‍ ശാന്തിയും‍ കാവലുമഞ്ചും‍ നാട്ടിന്നഴകു നൽകിടും‍. (൭൱൩൰൮)

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.   (௭௱௩௰௯ - 739)
 

കഠിനാദ്ധ്വാനമില്ലാതെ വൃദ്ധിനൽകുന്ന നാടുകൾ‍ നാടാകും‍; കഠിനാദ്ധ്വാനം‍ നാടിന്നശുഭമായിടും‍. (൭൱൩൰൯)

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.   (௭௱௪௰ - 740)
 

മേൽ‍കുറിപ്പിട്ട ഭാഗ്യങ്ങളെല്ലാമുണ്ടായിരിക്കിലും‍ ഭരണം‍ യോഗ്യമല്ലെങ്കിലവയാൽ നന്മ കൈവരാ. (൭൱൪൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: தோடி  |  തല: ஆதி
பல்லவி:
வள்ளுவர் கண்ட திருநாடு - இந்த
வையக மெல்லாம் இதற்கில்லை ஈடு

அநுபல்லவி:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வமும் சேர்வதுநாடு என்றே திகழும்

சரணம்:
வருக வருக வென்னும் மாமலைத் தோற்றம்
வருபுனல் ஊற்றுடன் மழையும் பாராட்டும்
பெருகிடும் செல்வமுடன் விளைவின்பமும் போற்றும்
பேரன்பு காட்டி மக்கள் பசிப்பிணியை ஆற்றும்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லாத நாடாகவே நிலைக்கும்
வல்லரண் கொண்டதாக வாழ்வும் வளமும் பொங்கும்
எல்லோரும் வாழும் நல்ல இசைமுரசும் முழங்கும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22