വരണം

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.   (௫௱௧ - 501)
 

ധർമ്മാർത്ഥ കാമങ്ങളിലും ജീവനിൽ ഭയപ്പാടിലും ശോധനാ ചെയ്തശേഷം താൻ വ്യക്തിയെ നിർണ്ണയിക്കണം (൫൱൧)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.   (௫௱௨ - 502)
 

കുലജൻ, കുറ്റമില്ലാത്തോൻ, പഴി പേടിച്ചു പാപങ്ങൾ ചെയ്‌വാൻ നാണമിയന്നവൻ വിശ്വാസത്തിലെടുക്കലാം (൫൱൨)

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.   (௫௱௩ - 503)
 

ഏറെ ഗ്രന്ഥം പഠിച്ചോനും കുറ്റമറ്റവനാകിലും സൂക്ഷ്മശോധനയിൽ വിദ്വാനാണെങ്കിൽ യോഗ്യനാണയാൾ (൫൱൩)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (௫௱௪ - 504)
 

ഗുണങ്ങളും ദോഷങ്ങളുമാരാഞ്ഞു പരികീർത്തിച്ചു ഭാരമുള്ള വിഭാഗത്തിൽ വ്യക്തിയെച്ചേർത്തു ചൊല്ലണം (൫൱൪)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.   (௫௱௫ - 505)
 

മാന്യനോ ഹീനനോയെന്ന തീരുമാനമെടുക്കുവാൻ ഉരകല്ലായ് യഥാർത്ഥത്തിൽ വ്യക്തി കർമ്മങ്ങൾ തന്നെയാം (൫൱൫)

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.   (௫௱௬ - 506)
 

സമൂഹബന്ധമില്ലാത്തോർ വിശ്വസ്തരായ് ഗണിച്ചിടാ പഴിയിൽ ഭയമില്ലാത്തോരാകയാൽ പിഴ ചെയ്തിടും (൫൱൬)

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.   (௫௱௭ - 507)
 

സ്നേഹബന്ധം കണക്കാക്കി വിജ്ഞനല്ലാത്ത വ്യക്തിയെ വിശ്വസ്തനായ് വരിച്ചെന്നാലജ്ഞാനം പെരുതായ് വരും (൫൱൭)

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.   (௫௱௮ - 508)
 

ബന്ധമില്ലാത്തവൻ സ്വന്തമെന്ന ഭാവത്തിലേൽക്കുകിൽ തനിക്കും താവഴിക്കാർക്കും ദുഃഖത്തിന്നിടയായിടും (൫൱൮)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.   (௫௱௯ - 509)
 

പരിശോധന കൂടാതെയെടുത്തീടരുതാരെയും എടുത്തപിൻ സന്ദേഹത്തിൽ നിറുത്തുന്നതഭംഗിയാം (൫൱൯)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.   (௫௱௰ - 510)
 

ശോധിക്കാതെയെടുത്താലും ശോധിച്ചെടുത്തവൻ മേലേ സന്ദേഹിച്ചു നടന്നാലും ഖേദത്തിന്നിടയായിടും (൫൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சிந்துபைரவி  |  തല: கண்ட ஆதி
கண்ணிகள்:
தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி

ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா

பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி

பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை

பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22