ആലിംഗനം

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.   (௲௱௧ - 1101)
 

സ്പർശനദർശന ശ്രാവ്യ രസഗന്ധങ്ങൾ നൽകിടും ഇമ്പമെല്ലാം വളയേന്തുമിവളിൽ നിന്നുലഭ്യമാം (൲൱൧)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.   (௲௱௨ - 1102)
 

ത്രിദോഷളൊഴിക്കാനായൗഷധമെതിർഭാവമാം അണിവണിഞ്ഞിവളേൽപ്പിച്ച രോഗത്തിന്നവളൗഷധം (൲൱൨)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.   (௲௱௩ - 1103)
 

ഞാൻ ഭ്രമിക്കുന്ന സൗന്ദര്യ ധാമത്തിൻ നേർത്ത തോളുകൾ ധരിക്കും തുകിൽ മാധുര്യം ദേവലോകത്തിൽ കാണുമോ? (൲൱൩)

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.   (௲௱௪ - 1104)
 

അകന്നാൽ ചുട്ടുനീറ്റാനുമണഞ്ഞാൽ കുളിരേകാനും പോരുമീകാമാഗ്നിയിവൾക്കെങ്ങുനിന്നു ലഭിച്ചതോ? (൲൱൪)

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.   (௲௱௫ - 1105)
 

മലരണിക്കൂന്തലാളിൻ തോളുകൾ കണ്ടു നിൽക്കവേ ഭംഗിയേറുന്ന വസ്തുക്കൾ നിനച്ചാലതു പോലെയാം (൲൱൫)

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.   (௲௱௬ - 1106)
 

ചേരും നേരമുയിർവാട്ടം വെടിഞ്ഞു തളിർക്കുന്നതാൽ ഇവളിൻ തോളമൃതത്താൽ മാത്രം സൃഷ്ടിച്ചതാവണം (൲൱൬)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.   (௲௱௭ - 1107)
 

കാന്തിമത്വമിയന്നുള്ളോരഴകിയിന്നാലിംഗനം സ്വന്തം പൊരുൾ പലരുമായ് ചേർന്നശിപ്പതു പോലെയാം (൲൱൭)

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.   (௲௱௮ - 1108)
 

ഇളം കാറ്റും പ്രവേശിക്കാനിടം നൽകാത്ത രീതിയിൽ ഇരുവർ പ്രേമബന്ധത്തിലന്യോന്യമിമ്പമാർന്നിടും (൲൱൮)

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.   (௲௱௯ - 1109)
 

ഉടലോടുടൽ ചേർന്നള്ളിത്തഴുകിപ്പുണരുന്നതും കാമുകീകാമുകന്മാരായുള്ളവർക്കനുഭൂതിയാം (൲൱൯)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.   (௲௱௰ - 1110)
 

ചെന്നിറമണിഞ്ഞിവളിലാവേശമാഴമേറെയായ് ഗ്രന്ഥപാരായണത്താലെയജ്ഞാനം ബോധമായ പോൽ (൲൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: செஞ்சுருட்டி  |  തല: மிஸ்ரசாப்பு
கண்ணிகள்:
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளதாம் உண்மையில் - காதல்
கொண்டவர் தாம் புணர்ச்சி மகிழ்தலும் பெண்மையில்

தொட்டபோதெல்லாம் துளிர்க்கும் பட்டுமேனிப் பாவையிவளின்
தோளிரண்டும் அமிழ்தினாலே இயன்றதோ - இந்த
நாளின் இன்பம் பருவமழையாய்ப் பொழிந்ததோ

நீங்கும் போது வெம்மை செய்யும் நெருங்கும்போது தண்மைபெய்யும்
நிலவு போன்றாள் நெருப்பை எங்ஙனம் பெற்றனள் - என்னை
விலகிடாது தன் நோய்க்கும் மருந்தாய் உற்றனள்

ஊடல் உணர்தல் புணர்தல் காதல் கூடியார்தாம் பெற்றபயனாய்
உள்ளம் விரும்பும் யாவும் இவளிடம் தோன்றுதே - ஒரு
கள்ளமும் இல்லாது பகுத்துண்ணல் போன்றதே

பூமருவும் வண்டு போலவும் மாமரத்தில் மயிலைப் போலவும்
காமவல்லியின் தோளில் துயின்றிடும் துயில்எனில் - அந்தத்
தாமரைக் கண்ணான் உலகும் இனிது கொல்

அறியும்தோறும் அறியும்தோறும் அறிந்திடாமையைக் காண்பதேபோல்
அரியநூற் பயனாகும் சேயிழை இன்பமே - வாழ்க்கை
புரியவே எனை வாழ்த்திடும் குறள் செல்வமே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22