അജ്ഞത

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.   (௮௱௪௰௧ - 841)
 

ഉലകത്തിലില്ലായ്മകളേറെയുണ്ട റിവില്ലായ്മ കൊടിയതായ്ക്കാണും മറ്റില്ലായ്മകൾ ലഘുവായിടും (൮൱൪൰൧)

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.   (௮௱௪௰௨ - 842)
 

അജ്ഞൻ പുർണ്ണമനസ്സോടെ ദാനമായൊന്നു നൽകുകിൽ സ്വീകർത്താവിൻറെ സൽക്കർമ്മ പുണ്യത്താൽ സംഭവിച്ചതാം (൮൱൪൰൨)

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.   (௮௱௪௰௩ - 843)
 

അജ്ഞാനത്താൽ സ്വയം ചെയ്യുമനർത്ഥങ്ങൾ നിരൂപിക്കിൽ ദ്രോഹം ചെയ്യുന്നശത്രുക്കൾ ചെയ്‍വതേക്കാൾ കടുപ്പമാം (൮൱൪൰൩)

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.   (௮௱௪௰௪ - 844)
 

ഞാനെല്ലാമറിയുന്നോനെന്നൊരുവൻ കരുതീടുകിൽ ആപത്തിന്നിടയാക്കുമാമജ്ഞാനമവിവേകമാം (൮൱൪൰൪)

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.   (௮௱௪௰௫ - 845)
 

അറിവില്ലാത്ത ഗ്രന്ഥങ്ങളറിയാമെന്ന് ഭാവിക്കിൽ അറിയുന്നവയിൽ കൂടി വിശ്വാസം നഷ്ടമായിടും (൮൱൪൰൫)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.   (௮௱௪௰௬ - 846)
 

സ്വന്തം കുറ്റങ്ങൾ ബോധിച്ച് സ്വയം ശുദ്ധീകരിക്കണം മറയ്ക്കുന്നതിനാൽ പോമോ അംഗവൈകല്യമാടയാൽ (൮൱൪൰൬)

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.   (௮௱௪௰௭ - 847)
 

ഉപദേശങ്ങൾ കേട്ടാലുമാചരിക്കാതിരിക്കുകിൽ അജ്ഞാനത്താൽ തപിക്കുന്ന പാപിക്കുസമമായിടും (൮൱൪൰൭)

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.   (௮௱௪௰௮ - 848)
 

വിജ്ഞർ വിചനമേൽക്കാനോ സ്വയമറിഞ്ഞു ചെയ്‌വാനോ പ്രാപ്തനല്ലാത്തവൻ ജീവകാലം ഭൂമിക്ക് ഭാരമാം (൮൱൪൰൮)

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.   (௮௱௪௰௯ - 849)
 

അജ്ഞന്ന് വിദ്യയോതുന്ന വിജ്ഞൻ മാറിടുമജ്ഞനായ് അജ്ഞൻ തന്നന്ധകാരത്തിൽ വിജ്ഞഭാവം നടിച്ചിടും (൮൱൪൰൯)

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.   (௮௱௫௰ - 850)
 

ഉണ്ടെന്ന് ലോകർ ചൊല്ലുന്നതില്ലെന്ന് പറയും ഭോഷൻ അലഞ്ഞുതിരിയാറുള്ള പ്രേതമായ് കരുതപ്പെടും (൮൱൫൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சிந்துபைரவி  |  തല: ஆதி
கண்ணிகள்:
புல்லறி வாண்மையே ஏன் பிறந்தாயோ
பூமியில் பிறந்ததன் பயன் அடைந்தாயோ
நல்லோர்கள் சொல்வதைக் காதிற் கேளாயோ
நான் எனும் அகந்தைக்கே பிறப்பிடம் நீயோ

அறிவு கொண்டே குற்றத்தைக் கலையாத போழ்தில்
ஆடை கொண்டே உடலை மறைப்பதும் ஏனோ
அறியாத நூல்களையும் அறிந்ததாய் மேற்கொண்டால்
அறிந்ததும் ஐயமாய்ப் போகும் அன்றே

பூவாமல் காய்த்திடும் மரமுமே உள்ளதைப்
புல்லறி வாண்மை நீ உணர்ந்திலையோ
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போகும் அளவும் ஒரு நோயல்லவோ

அரிய மறை பொருளைக் காத்துக் கொள்ளாமலே
அல்லலில் சிக்கியே மடிவாயோ
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மை வையாதுலகு எனும் குறளே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22