രാഗ: காமவர்த்தினி | തല: ஆதி பல்லவி:வாய்மையைக் காப்பதே மாண்புடைமை - நம்
வண்டமிழ்க் குறள் சொல்லும்
இதன் அருமை பெருமை
அநுபல்லவி:தூய்மையாய் உள்ளத்தைத் துலக்கிடும் வாய்மை
தோன்றும் நல்வாழ்க்கையிலே
சொல்லும் செயலுமாக
சரணம்:பட்டம் பதவி பொருள் கிட்டும் என்றாலும்
பைம்பொன்னணி இழையார் பக்கம் வந்தாலும்
சுட்டுக்கொல்லும் துப்பாக்கி முன்பு நின்றாலும்
துன்பத்திற்கஞ்சாமலே துணிவும் கனிவும் கொள்ளும்
"பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றென" முழங்குவோம்
பொய்யாமை யன்னதொர் புகழ்ச்செல்வம் உண்டோ
பொருந்தும் அறங்களெல்லாம் தருவதும் ஈதன்றோ