രാഗ: சண்முகப்பிரியா | തല: ஆதி பல்லவி:சொல்வன்மை யளித்திடும் நா நலமே
சொல்லும் நலத்திற் கெல்லாம்
இது முதல் - வருமே
அநுபல்லவி:வில் வேல் வாளாண்மை வீரரையும் கவரும்
சொல்வன்மை யாளர் தொழில்
சூழ்ந்தே கேட்கும் உலகம்
சரணம்:ஆக்கமும் கேடும் அவரவர் சொல்லால் வரும்
அதனால் சோர்வு படாமல் சொல்லினைக் காத்திடும்
வாக்கின் தெளிவு பெற்றால் வாழ்வே மிக இனிதாம்
வழங்கும் சொல் வல்லவனை வெல்லல் யார்க்கும் அரிதாம்
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்" லிதே பாராளும்
"வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" எனும் குறள் பாடல்