പഠനം

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   (௩௱௯௰௧ - 391)
 

ആവശ്യം വേണ്ട വിജ്ഞാനം വഴിപോലഭ്യസിച്ച പിൻ ലബ്ധവിദ്യ പ്രയോഗിച്ചു ജീവിതം ധന്യമാക്കണം (൩൱൯൰൧)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..   (௩௱௯௰௨ - 392)
 

ഗണിതവും സാഹിത്യവും ഉയിർവാഴും മനുഷ്യർക്ക് നയനദ്വയമാണെന്ന് ചൊല്ലീടുന്നു മഹത്തുകൾ (൩൱൯൰൨)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.   (௩௱௯௰௩ - 393)
 

അഭ്യസ്തവിദ്യരായുള്ളോർ കണ്ണുള്ളോരെന്ന് ചോല്ലലാം അജ്ഞരോ വദനത്തിന്മേൽ വ്രണം രണ്ടുവഹിപ്പവർ (൩൱൯൰൩)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.   (௩௱௯௰௪ - 394)
 

ആനന്ദം തോന്നുമാർ കൂടിക്കലർന്നു പഴകിപ്പിന്നെ മനം നൊന്ത് പിരിഞ്ഞീടൽ പണ്ഢിതർക്കനുയോജ്യമാം (൩൱൯൰൪)

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.   (௩௱௯௰௫ - 395)
 

പാവങ്ങൾ ധനികർ മുന്നിലെന്നപോൽ പണ്ഢിതൻ മുന്നിൽ ഏങ്ങിനിന്നു പഠിച്ചുള്ളോർ യോഗ്യ രേഴകളന്യരും (൩൱൯൰൫)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.   (௩௱௯௰௬ - 396)
 

കെണിയിൽ താഴ്ച കൂടുമ്പോൾ ജലമുറിവരുന്നപോൽ അഭ്യാസാധിക്യമേറും പോലറിവേറി വളർന്നിടും (൩൱൯൰൬)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.   (௩௱௯௰௭ - 397)
 

പിറന്നനാടുപോൽ വിജ്ഞന്നെല്ലാനാടും സമത്വമാം മാലോകരന്തരിപ്പോളം വിദ്യനേടാത്തതെന്തിനാൽ? (൩൱൯൰൭)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.   (௩௱௯௰௮ - 398)
 

ഒരു ജന്മത്തിലാർജ്ജിച്ച തത്വവിജ്ഞാനശേഖരം ഏഴുജന്മാന്തരത്തോളം നിലനിൽക്കും മനുഷ്യനിൽ (൩൱൯൰൮)

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.   (௩௱௯௰௯ - 399)
 

വിജ്ഞാനത്താൽ തനിക്കുള്ള തോഷത്തിൽ ലോകരും തൃപ്തി ഭാവിക്കുന്നതിനാൽ വിദ്യ വർദ്ധിക്കാനാശയേറിടും (൩൱൯൰൯)

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (௪௱ - 400)
 

ഒരുനാളും നശിക്കാത്ത ശ്രേഷ്ഠസമ്പത്തു വിദ്യയാം മറ്റു സമ്പാദ്യവസ്തുക്കൾക്കൊന്നും സ്ഥിരതയില്ലകേൾ (൪൱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: மகாநந்தி  |  തല: ஆதி
பல்லவி:
கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி எனும் கைப்
கருத்தினை யறிந்திடுவோம்

அநுபல்லவி:
பொய்ப் பொருள் போகத்தில்
புரண்டிடும் செல்வத்தைப்
போற்றத் தகுந்த விதம்
பொலிவுறச் செய்வதினால்

சரணம்:
தோண்டு மளவில் மணல் கேணியில் நீர் ஏறும்
துலங்கும் மக்களறிவும் கற்றனைத்தே ஊரும்
வேண்டு மளவும் கற்கக் கசடறக் கற்பவை
விளங்கிடக் கற்றவிதம் நிற்பதே தக்கவை

"எண்ணென்ப வேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்" காம் துணை என்றும்
எண்ணில் அழியாச் செல்வம் கல்வியாம் பொருளே
எழுமைக்கும் பயன்பெற இசைத்திடும் குறளே




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22