ശത്രുക്കള്‍

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.   (௮௱௭௰௧ - 871)
 

പകയെന്നുള്ളതോ പാർത്താൽ സംസ്കാരശൂന്യമാം ഗുണം കളിതമാശയായ് പോലുമാരോടും പകവെക്കൊലാ (൮൱൭൰൧)

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.   (௮௱௭௰௨ - 872)
 

വില്ല് കലപ്പയായുള്ളോർ മേലേ പക നിനക്കിലും വാണി കലപ്പയായുള്ളോർ നേരേ പകഗുണം വരാ (൮൱൭൰൨)

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.   (௮௱௭௰௩ - 873)
 

ഏകനായ് തുണയില്ലാതെ പലരിൽ പക വെക്കുകിൽ ഭ്രാന്തനാണെന്നതേക്കാളും മോശമായ് കരുതപ്പെടും (൮൱൭൰൩)

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.   (௮௱௭௰௪ - 874)
 

പക തോന്നേണ്ട ഘട്ടത്തിൽ പകരം സ്നേഹവായ്പിനിൽ പെരുമാറും സ്വഭാവത്തിലുലകം കീഴ്പണിഞ്ഞിടും (൮൱൭൰൪)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.   (௮௱௭௰௫ - 875)
 

തുണയില്ലാ, താനൊറ്റയിലിരുശത്രുക്കളുണ്ടെങ്കിൽ ഒരുവനേ സ്നേഹത്താലേ കൂട്ടുന്നതനിവാര്യമാം (൮൱൭൰൫)

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.   (௮௱௭௰௬ - 876)
 

വിപൽക്കാരത്തിലാരോടും സ്നേഹം കെട്ടാതിരിക്കണം ശത്രുവോ മിത്രമാകട്ടെ, നിസ്സംഗത വിശിഷ്ടമാം (൮൱൭൰൬)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.   (௮௱௭௰௭ - 877)
 

അന്യരേയറിവിക്കൊല്ലാ സ്വന്തം ദുരിതവാർത്തകൾ ഗതികെട്ടലയുന്നേരം ശത്രു കാണാതിരിക്കണം (൮൱൭൰൭)

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.   (௮௱௭௰௮ - 878)
 

വമ്പനാണെന്ന നാട്യത്തിൽ കാര്യങ്ങൾ നിർവഹിക്കണം അതിനാൽ ശത്രുവിൻ വൈരം ശക്തി കെട്ടു മയങ്ങിടും (൮൱൭൰൮)

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.   (௮௱௭௰௯ - 879)
 

ഇളംപ്രായത്തിലേ വെട്ടിക്കൊള്ളണം മുൾമരങ്ങളെ മൂത്താൽ വെട്ടും കരങ്ങൾക്ക് നിശ്ചയം മുരിവേറ്റിടും (൮൱൭൰൯)

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.   (௮௱௮௰ - 880)
 

ശത്രുവിൻ ശക്തിയേമുറ്റും ഹനിക്കാതെയിരിപ്പവൻ ശ്വാസോച്ഛാസമിയന്നാലും ജീവനില്ലാത്ത പോലെയാം (൮൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)


கிளிக்கண்ணி:
பண்பின் வழி நடக்கப் பகைவரின் செருக்கடக்க
நண்பர்கள் சூழ்ந்து நிற்க - கிளியே
நாடும் நம் குறளாட்சியே

வில்லே ருழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை - என்றே
சொல்லும் நல் லறிவுரையே

இளைதாகவே முள்மரம் இருந்தாலும் கொல்லவேண்டும்
விளையாட்டுக்கும் பகையை - கிளியே
விரும்புதல் கூடாதடி

இணையும் துணையோ இல்லை என்றாலும் பகை இரண்டால்
துணையதில் ஒன்றைக் கொண்டால் - கிளியே
தோல்வியே இல்லை கண்டாய்

பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் பெரும்
தகைமைக் கண் தங்கிற்றுலகு - கிளியே
தழைக்கவே பணி புரிவோம்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22