വര്‍ണ്ണഭേദം

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.   (௲௱௮௰௧ - 1181)
 

കാമുകനെന്നെയും വിട്ടു പിരിഞ്ഞ നാളെൻ മേനിയിൽ ഏർപ്പെട്ട നിറഭേദങ്ങലാരിടം വ്യാഹരിപ്പുഞാൻ (൲൱൮൰൧)

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.   (௲௱௮௰௨ - 1182)
 

നാഥനാൽ പ്രേരിതമെന്ന ധിക്കാരഭാവത്തോടെ നിറഭേദം ശരീരത്തിലൂർജ്ജിതം നിലനിൽക്കയാം (൲൱൮൰൨)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.   (௲௱௮௰௩ - 1183)
 

എനിക്ക് കാമുകൻ നൽകി വിളർപ്പും പ്രേമതാപവും പകരം കൊണ്ടുപോയെൻറെ ലജ്ജയും കോമളത്വവും (൲൱൮൰൩)

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.   (௲௱௮௰௪ - 1184)
 

പ്രേയാൻറെ മധുരോക്തികൾ നിനപ്പൂ; ബഹുമാന്യമായ് വർണ്ണിപ്പൂ; മേനിയിൽ വന്ന വിളർപ്പു ചതിയാകുമോ? (൲൱൮൰൪)

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.   (௲௱௮௰௫ - 1185)
 

ഒരു നാൾ കാമുകൻ വിട്ടുപിരിഞ്ഞു പരദേശിയായ് നിറഭേദം ദിനംതോറും പടരുന്നെൻറെ മേനിയിൽ (൲൱൮൰൫)

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.   (௲௱௮௰௬ - 1186)
 

ദീപദീപ്തിബലം നോക്കി തമസ്സേറുന്ന പോലവേ വിളർപ്പും കാമുകസ്പർശപ്രാപ്തിനോക്കിയിരിക്കയാം (൲൱൮൰൬)

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.   (௲௱௮௰௭ - 1187)
 

നാഥനൊത്തുകിടക്കുമ്പോളൽപ്പമൊന്നകലത്തിലായ് തൽക്ഷണം നിറഭേദം വന്നേറിയെന്നുടെ മേനിയിൽ (൲൱൮൰൭)

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.   (௲௱௮௰௮ - 1188)
 

വിരഹത്താൽ വിളർപ്പായെന്നെൻറെ മേൽ പഴിചൊല്ലുവോർ പ്രാണനാഥനുപേക്ഷിച്ചെന്നോതുന്നോരാരുമില്ലയേ (൲൱൮൰൮)

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.   (௲௱௮௰௯ - 1189)
 

കാമുകൻ ചെയ്തവാഗ്ദത്തം പാലിക്കാനിടയാകുകിൽ മദ്ദേഹം വർണ്ണഭേദത്താൽ വിളർത്തേ നിലനിൽക്കണം (൲൱൮൰൯)

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.   (௲௱௯௰ - 1190)
 

കാമുകൻ തൻ വിയോഗത്താൽ വിവർണ്ണബാധയേറ്റതായ് ഊരാർചൊല്ലാതിരുന്നെങ്കിൽ വൈവർണ്ണ്യം ഗുണമാണെനിൽ (൲൱൯൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாமா  |  തല: ரூபகம்
பல்லவி:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்ததென்
பண்பியார்க் குரைக்கோ பிற

அநுபல்லவி:
உயர்ந்த நல்ல நிலையில் உள்ளார் அவரே என்றால்
உள்ளபடி என்மேனி பசலை நிறம் பெறுக

சரணம்:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வற்றே பசப்பெனவே குறளில்
சொல்லிய விளக்கற்றம் பார்க்கும் இருள் போல் கொண்கன்
மெல்லியென் முயக்கற்றம் பார்க்கும் விந்தை என்னேடி

நேயமிகும் காதலர் நீங்கிச் செல்கின்றார் அதோ
நேரிழை யென் பொன்மேனியில் பசலை நிறம் பார் இதோ
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறாக
நோயும் பசலையுமே தந்தாரடி என் பாங்கி




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22