കര്‍മ്മശുദ്ധി

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.   (௬௱௫௰௧ - 651)
 

തുണയാലൊരുവൻ നേടും പ്രതാപം സമുദായത്തിൽ കർമ്മശുദ്ധിയിനാലാശിക്കുന്നതെല്ലാം ലഭിച്ചിടും (൬൱൫൰൧)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652)
 

ലോകപ്രസിദ്ധിയോടൊപ്പം ധാർമ്മികഗുണമേന്മയും നേടിത്തരുന്നതല്ലാത്ത കർമ്മങ്ങളൊഴിവാക്കണം (൬൱൫൰൨)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653)
 

ജനമദ്ധ്യേ പ്രഭാവത്തിൽ ജീവിക്കാനാഗ്രഹിപ്പവൻ മേന്മക്ക് ഹാനിയേൽപ്പിക്കും വിനചെയ്യാതിരിക്കണം (൬൱൫൰൩)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654)
 

മാന്യരായുള്ളവർ തങ്ങൾക്കേർപ്പെട്ട ദുരിതങ്ങളെ നിർമാർജ്ജനം ചെയ്വാനായി ഹീനകൃത്യങ്ങൾ ചെയ്തിടാ (൬൱൫൰൪)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655)
 

പിമ്പേ ഖേദിക്കുമാറുള്ള തിന്മകളൊഴിവാക്കണം അഥവാ ചെയ്തു പോയെങ്കിലാവർത്തിക്കാതിരിക്കണം (൬൱൫൰൫)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656)
 

മാതാവിൻ പശിതാങ്ങാതെ ദുഃഖിക്കുന്നവനാകിലും ലോകം പഴിക്കും ദുർവൃത്തി ചെയ്യാതൊഴിഞ്ഞു മാറണം (൬൱൫൰൬)

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657)
 

ഇഴിവാം പാപകർമ്മത്താൽ ലബ്ധദ്രവ്യം നിഷിദ്ധമാം ധർമ്മകർമ്മികൾ താങ്ങുന്ന ദാരിദ്ര്യം തന്നെ കാര്യമാം (൬൱൫൰൭)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658)
 

തീയ കർമ്മങ്ങൾ ചെയ്വോർക്ക് വിജയം കൈവരിക്കിലും പിന്നീടവകളെച്ചൊല്ലി നിശ്ചയം ദുഃഖമേർപ്പെടും (൬൱൫൰൮)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659)
 

നീചമാർഗ്ഗേണ സമ്പാദ്യം വേദനിപ്പിച്ചൊഴിഞ്ഞുപോം ശുദ്ധമായവ പോയാലും പിറകേ വന്നു ചേർന്നിടും (൬൱൫൰൯)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   (௬௱௬௰ - 660)
 

ന്യായമല്ലാത്ത സമ്പാദ്യം സംരക്ഷിക്കാനൊരുമ്പെടൽ വേവാത്ത മൺകലത്തിൽ നീർ സൂക്ഷിക്കുന്നതു പോലെയാം (൬൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: பைரவி  |  തല: ஆதி
பல்லவி:
பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்

அநுபல்லவி:
அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி

சரணம்:
புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்

தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22