ഭിക്ഷാടനം

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.   (௲௫௰௧ - 1051)
 

തക്കവ്യക്തികളെക്കണ്ടാലെത്തിയാചന ചെയ്യലാം ഭിക്ഷനൽകാതൊഴിഞ്ഞീടിലപ്പാപമവർക്കുള്ളതാം (൲൫൰൧)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.   (௲௫௰௨ - 1052)
 

ഇരക്കും പൊരുൾ മുട്ടാതെയെളുതായ് ലഭ്യമാകുകിൽ അത്തരത്തിലിരന്നീടൽ സന്തോഷകരമായിടാം (൲൫൰൨)

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.   (௲௫௰௩ - 1053)
 

ഉദാരശീലരായുള്ള ശുദ്ധമാനസർ മുന്നിലായ് യാചനം ചെയ്കയെന്നാകിലതിലും ഭംഗികാണലാം (൲൫൰൩)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.   (௲௫௰௪ - 1054)
 

നിദ്രയിലുമൊളിക്കാത്ത തന്മയുള്ളോരിടത്തു പോയ് യാചിപ്പതു ദാനംപോലെ യോഗ്യമെന്നുര ചെയ്യലാം (൲൫൰൪)

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.   (௲௫௰௫ - 1055)
 

ദാനശീലം വിടാതുള്ള സജ്ജനം സമുദായത്തിൽ നിലനിൽപ്പുള്ളതാൽ ഭിക്ഷാടനം നാട്ടിൽ നടക്കയാം (൲൫൰൫)

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.   (௲௫௰௬ - 1056)
 

ഭിക്ഷാദാനം കൊടുപ്പോരെ യാചകൻ നേരിടുമ്പൊഴേ വറുതിയാലുള്ള താപമറുതി നേരിടുന്നതാം (൲൫൰൬)

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.   (௲௫௰௭ - 1057)
 

ഹീനവാക്യമുരക്കാതെ തൃപ്തിയിൽ ഭിക്ഷനൽകിയാൽ യാചകന്നകമാനന്ദം കൊണ്ടു നിർഭരമായിടും (൲൫൰൭)

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.   (௲௫௰௮ - 1058)
 

ഭിക്ഷാടാകരില്ലാവീട്ടാൽ ഭുമുഖത്തുള്ള ജീവിതം കയറാൻ ചലിക്കുംപോലാം മരത്തിൽ ചെയ്ത പാവകൾ (൲൫൰൮)

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.   (௲௫௰௯ - 1059)
 

യാചിച്ചു പൊരുൾ കൈക്കൊള്ളാൻ യാചകകുലമില്ലയേൽ ദാനശീലമിയന്നുള്ളോർ പുകൾ നേടുന്നതെങ്ങിനെ? (൲൫൰൯)

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.   (௲௬௰ - 1060)
 

യാചകൻ ഭിക്ഷ കിട്ടാഞ്ഞാൽ കോപം കൊള്ളാതിരിക്കണം സ്വന്തം വറുതിദുഃഖത്തിൽ നിന്ന് പാഠം പഠിക്കണം (൲൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சாரமதி  |  തല: ஆதி
பல்லவி:
இன்மையைத் தீர்க்கும் குடிப் பிறந்தோயே!
இரவும் இனிதாகவே இசை வளர்த்தாயே!

அநுபல்லவி:
முன்பு வறுமைத் தீயில் மூழ்கி நொந்தோரை
அன்புடனே எடுத்தாய்
அரவணைத்தாய் காத்தாய்!

சரணம்:
உண்ணவரும் வண்டினத்தின் வண்ணமலர்த் தேனாவாய்
ஊட்டவரும் கன்றுகட்கும் உள்ளமகிழ் தாய் போல்வாய்
எண்ணமெல்லாம் நிறையும் இரவலர் இன்பம் நீ
ஏற்றதும் துன்புறாமல் ஈந்தருளும் செல்வம் நீ

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தாற் போலெனும் குறள் கூறும்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப் பிடும்பை
எல்லாம் ஒருங்கே கெடும் நல்லாளின் பார்வை பெறும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22