വ്യംഗ്യം

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.   (௲௨௱௭௰௧ - 1271)
 

നീ കഥിക്കാതിരുന്നാലുമെന്നോടു പറയേണ്ടതായ് ഗോപ്യമാം വാർത്തയൊന്നുണ്ടെന്നോതുന്നു നിൻറെ ദൃഷ്ടികൾ (൲൨൱൭൰൧)

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.   (௲௨௱௭௰௨ - 1272)
 

മുളപോലഴകാം തോളുമൊളിയും ലോചനങ്ങളും ചേർന്നു പെൺതനി രൂപത്തിൽ വിളങ്ങീടുന്നു കാമുകി (൲൨൱൭൰൨)

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.   (௲௨௱௭௰௩ - 1273)
 

സ്ഫടികമാല തന്നുള്ളിൽ ദൃശ്യമാകുന്ന നൂലുപോൽ എന്നോമനയെഴും സൗഭഗത്വവും സൂചനീയമാം (൲൨൱൭൰൩)

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.   (௲௨௱௭௰௪ - 1274)
 

വിരിയാത്ത സുമത്തിൻറെ ഗന്ധം മൊട്ടിലടഞ്ഞപോൽ കാമിനീ പുഞ്ചിരിക്കുള്ളിലടങ്ങുന്നുണ്ട് സൂചന (൲൨൱൭൰൪)

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.   (௲௨௱௭௰௫ - 1275)
 

കാതലിയെൻ മുഖം നോക്കിച്ചെയ്തതാം കള്ളസൂചന എൻമനോയാതനക്കുള്ള ഭൈഷജം തന്നെയായിടും (൲൨൱൭൰൫)

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.   (௲௨௱௭௰௬ - 1276)
 

പ്രണയപാരമ്യം കാണിച്ചിമ്പമായ് നാൾ കഴിക്കുകിൽ വിസ്മരിച്ചു പിരിഞ്ഞീടും ഭാവി സൂചനയായിടാം (൲൨൱൭൰൬)

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.   (௲௨௱௭௰௭ - 1277)
 

കൺകുളിർ കാമുകൻ വിട്ടു പിരിയുന്നതിന് മുന്നുമായ് കങ്കണങ്ങളറിഞ്ഞാവാമയഞ്ഞോടുന്നു കൈകളിൽ (൲൨൱൭൰൭)

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.   (௲௨௱௭௰௮ - 1278)
 

ഇന്നലേ മാത്രമാണല്ലോ നാഥനെന്നെപ്പിരിഞ്ഞത് വിളർത്ത ദേഹം കാണുമ്പോൾ നാളേഴായെന്ന് തോന്നുമേ (൲൨൱൭൰൮)

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.   (௲௨௱௭௰௯ - 1279)
 

കങ്കണക്കൂട്ടവും നേർത്തു മെലിഞ്ഞ രണ്ടുതോൾകളും ശോഷിച്ച കാൽകളും നോക്കിക്കേഴുന്നു നിലനിൽക്കുവാൻ (൲൨൱൭൰൯)

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.   (௲௨௱௮௰ - 1280)
 

കൺകളാൽ സ്നേഹപാരമ്യം കാണിച്ചു പിരിയാതിരി എന്ന് കേഴുന്ന പെൺശീലം ശ്രേഷ്ഠമാം ഭാവമായിടും (൲൨൱൮൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கர்நாடகதேவகாந்தாரி  |  തല: ஆதி
பல்லவி:
கரப்பினும் கையிகந் தொல்லா - நின்உண்கண்
உரைக்க லுறுவ தொன்றே
உண்டெனும் குறளில் கண்டதும் புரிதல்

அநுபல்லவி:
சிறப்புறும் கண்ணிறைந்த காரிகை நீயே
சீர்பெறும் பெண்ணிறைந்த நீர்மை கொண்டாயே

சரணம்:
அழகு மணி மாலையுள் நூலென ஓடி
அரும்பும் இளநகையின் மலர் மணமாகி
பழகும் குறிப்பறி வுறுத்தலில் மேவி
பாவையோடு திருக்கோவையும் பயிற்றும்
ஆவலோடு தமிழ்க் காவிய மியற்றும்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவென்னும் பண்ணினால்
தண்ணெனும் தாமரை முகத்தினள் எண்ணினால்
தாளும் தோளும் கைவளையாலும் நோக்கும்
தன்மை நன்மை வழி கொண்டென்னைச் சேர்க்கும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22