കുലം

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.   (௯௱௫௰௧ - 951)
 

ചൊല്ലിലും ചേലിലും മദ്ധ്യ നിലയും, മാനഹാനിയിൽ ലജ്ജയും നൽകുഡുംബത്തിൽ പിറന്നവരിലുള്ളതാം (൯൱൫൰൧)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.   (௯௱௫௰௨ - 952)
 

സത്യത്തിൽ നിഷ്ഠയും, സത്സ്വഭാവവും, പാതകങ്ങളിൽ ഭയവും- മൂഗുണങ്ങളും സൽകുഡുംബസ്വഭാവമാം (൯൱൫൰൨)

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.   (௯௱௫௰௩ - 953)
 

മുഖപ്രസാദവും, ദാനം കൂടേ മധുരഭാഷണം അന്യരേ പഴിചൊല്ലായ്ക- നാലും സൽക്കുല ലക്ഷണം (൯൱൫൰൩)

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.   (௯௱௫௰௪ - 954)
 

ധനസമ്പാദനത്തിന്നായുതകും മാർഗ്ഗമാകിലും കുലത്തിൻ ശ്രേഷ്ഠതക്കൂനമേറ്റും തൊഴിലെടുത്തിടാ (൯൱൫൰൪)

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.   (௯௱௫௰௫ - 955)
 

ദാനശീലം വളർന്നുള്ള ശ്രേഷ്ഠമാം കുഡുംബങ്ങളിൽ കാലദോഷത്തിനാൽ ശീലം വിട്ടുപോകില്ലൊരിക്കലും (൯൱൫൰൫)

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.   (௯௱௫௰௬ - 956)
 

കുഡുംബത്തിൻ മഹത്വങ്ങൾ വളർത്താനാഗ്രഹിപ്പവർ കഷ്ടകാലത്തിലും തീയ കർമ്മം ചെയ്യാനൊരുമ്പെടാ (൯൱൫൰൬)

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.   (௯௱௫௰௭ - 957)
 

കുലജാതർ ചെയ്യും കുറ്റമേറെ നിസ്സാരമാകിലും ചന്ദ്രൻറെ കലകൾ പോലെ ലോകശ്രദ്ധ പതിഞ്ഞിടും (൯൱൫൰൭)

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.   (௯௱௫௰௮ - 958)
 

സൽക്കുലത്തിൽ പിറന്നോരിൽ ദുഷ്കർമ്മം സംഭവിക്കുകിൽ കുഡുംബശുദ്ധിയെപ്പറ്റി സന്ദേഹിപ്പാനിടം വരും (൯൱൫൰൮)

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.   (௯௱௫௰௯ - 959)
 

മുളക്കും സസ്യജാലത്താലറിയാം ഭൂമിയിൻ ഗുണം ഭാഷണത്തിലറിഞ്ഞീടാം പിറവിക്കുല മേന്മയും (൯൱൫൰൯)

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.   (௯௱௬௰ - 960)
 

നന്മമോഹിപ്പവൻ ലജ്ജാശീലമുള്ളവനാകണം കുലമേന്മ, നിനക്കുന്നോൻ നന്മയായ് പെരുമാറണം (൯൱൬൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: சக்கரவாகம்  |  തല: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை - இது
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை
ஒப்புரவாண்மையுடன் செப்பமும் நாணும் கொண்ட

அநுபல்லவி:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார் என்று செல்லும் பொருள் நன்று காணும் குறள்

சரணம்:
மேலும் மேலும் துன்பம் வந்தாலும் வீழ்ச்சில்லார்
விண்ணில் உலாவும் மதி தன்னிலும் மேன்மையுள்ளார்
பாலும் கரும்பும் பொன்னும் சந்தனமும் போல்வார்
பண்பினோடு பழம் பெருமை வாய்ந்த குடி
வண்மை ஏழ்மையிலும் நீங்கிடாத படி

தொகையாகவே அடுக்கி ஒரு கோடி தந்தாலும்
தோன்றும் தன் குடிக்கென்றும் குன்றுவ செய்தல்இலர்
நகை ஈகை இன்சொல் இகழாமையே போற்றுவார்
நலம் விளங்கிடவும் குலம் விளங்கிடவும்
நாணயத்தினுடன் நல்லடக்கம் மிகும்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22