അഭിനയപ്പിണക്കം

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.   (௲௩௱௰௧ - 1311)
 

പെണ്മയുള്ളവരിൻ കൺകൾ വിസ്തൃതമങ്ങയിൻ മാറിൽ വീഴുന്നു; പൊതുസ്വത്തല്ലോ!കൂട്ടത്തിൽ ഞാനുമുൾപ്പെടാം (൲൩൱൰൧)

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.   (௲௩௱௰௨ - 1312)
 

പിണങ്ങിയിരിക്കവേ നമ്മളേറെ നാൾ ചേർന്നുവാഴണം എന്നു ചൊല്ലാൻ നിരൂപിച്ചണ്ടിരിക്കേയൊന്നു തുമ്മി ഞാൻ (൲൩൱൰൨)

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.   (௲௩௱௰௩ - 1313)
 

പുഷ്‌പമാലയണിഞ്ഞെന്നാലേതോ കാമിനി കാണുവാൻ മാത്രം ചൂടിയതാണെന്നു ചൊല്ലുവാളെൻറെ കാമുകി (൲൩൱൰൩)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.   (௲௩௱௰௪ - 1314)
 

ആരേക്കാളിലുമേറേനാം സ്നേഹിക്കുന്നെന്നു ചൊല്ലുകിൽ ആരേക്കാളാരേക്കാളെന്ന് ചോദിച്ചുപിണങ്ങീടുവാൾ (൲൩൱൰൪)

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.   (௲௩௱௰௫ - 1315)
 

ഈ ജന്മം പിരിയില്ലാനാമെന്ന് ചൊന്നാൽ മറുജന്മം ചേരില്ലെന്നോർത്തവൾ കണ്ണീർ പൊഴിക്കും ശോചനീയമായ് (൲൩൱൰൫)

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.   (௲௩௱௰௬ - 1316)
 

ഓർത്തു ഞാൻ നിന്നെയെന്നായാലോർക്കുവാനായ് മറന്നുവോ? എന്തിനെന്നെ മറന്നെന്നായ് പുണരാതെ പിണങ്ങിടും (൲൩൱൰൬)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.   (௲௩௱௰௭ - 1317)
 

തുമ്മി ഞാൻ; വാഴ്ത്തിനാളെന്നെ; തൽക്ഷണം ഭാവഭേദമായ് ആരെയാണോർത്തതെന്നാരാഞ്ഞുടൻ തേങ്ങിക്കരച്ചിലായ് (൲൩൱൰൭)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.   (௲௩௱௰௮ - 1318)
 

പിണക്കമൊഴിവാക്കാനായ് തുമ്മാതെ ഞാനടങ്ങിയാൽ ഉള്ളിലുള്ളതൊളിപ്പിക്കുന്നെന്നു ചൊല്ലിക്കരഞ്ഞിടും (൲൩൱൰൮)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.   (௲௩௱௰௯ - 1319)
 

പിണക്കിലനുരഞ്ജിപ്പിന്നടുത്താലിതുപോലല്ലോ മറ്റു പെൺകളിലും താങ്കളെന്നു ചൊല്ലിക്കയർത്തിടും (൲൩൱൰൯)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.   (௲௩௱௨௰ - 1320)
 

സൗന്ദര്യമാസ്വദിച്ചൽപ്പനേരം വീക്ഷിച്ചിരിക്കുകിൽ ആരെപ്പോലെയിരിപ്പൂഞാനെന്ന് കോപാന്ധയായിടും (൲൩൱൨൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: வாசஸ்பதி  |  തല: ஆதி
பல்லவி:
பாட்டுடைத் தலைவி என் பைந்தமிழ்க் காதலி
காட்டும் புலவி நுணுக்கம்
காதால் வாழ்வில் எனை அவள் வசப்படுத்தும்

அநுபல்லவி:
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்றே வெகுண்டுரைக்கும்

சரணம்:
பட்டும் படாமலும் என் பக்கத்திலே இருப்பாள்
தொட்டால் சிணுங்கிடுவாள் தோளில் முகம்கவிழ்ப்பாள்
விட்டுச் செல்வேனோ என்றென் விழிமேல் விழியை வைப்பாள்
வேண்டிப் பணிந்திட்டாலும் வித்தை எங்கே கற்றீர் என்பாள்

அச்சுப் பதுமையைப் போல் அசையாமல் வீற்றிருப்பாள்
ஆசை தீரப் பார்த்திட்டாலும் யாரை எண்ணிப் பார்த்தீர் என்பாள்
இச்சென்று தும்மினாலும் எவளோ நினைத்தாள் என்பாள்
இப்படியே எதிலும் ஊடிப் பின் கூடிக் கொள்வாள்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22