സ്ത്രീജിതത്വം

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.   (௯௱௧ - 901)
 

പെൺചൊൽകേട്ടു നടക്കുന്നോർ ജിവിതത്തിലുയർന്നിടാ കടമനിർവഹിക്കാനായാഗ്രഹിപ്പോർക്ക് ദോഷമാം (൯൱൧)

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.   (௯௱௨ - 902)
 

കർമ്മത്തിൽ ശ്രദ്ധയില്ലാതെ പത്നിക്ക് കീഴ് പണിഞ്ഞവൻ നാണക്കേടിലകപ്പെട്ടങ്ങപമാനിതനായിടും (൯൱൨)

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.   (௯௱௩ - 903)
 

ഭാര്യക്കടിമയാകുന്ന ദുർഗുണം ശീലമായവൻ പുരുഷത്വമിയന്നോരിൻ മദ്ധ്യേ ലജ്ജിതനായിടും (൯൱൩)

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.   (௯௱௪ - 904)
 

കളത്രത്തേ ഭയപ്പെടും പരനന്മയില്ലാത്തവൻ ലൗകീകതൊഴിലൂക്കത്താലൗ ന്നത്യം സാദ്ധ്യമായിടാ (൯൱൪)

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.   (௯௱௫ - 905)
 

സ്ത്രീജിതൻ തൻറെ നേട്ടത്താൽ സജ്ജനങ്ങൾക്ക് നന്മയായ് തോന്നുന്ന സുകൃതങ്ങളെ ചെയുവാൻ ശക്തനായിടാ (൯൱൫)

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.   (௯௱௬ - 906)
 

പത്നിയിൻ ചുമലിൽ നോക്കി ഭയന്ന് ജീവിക്കുന്നവർ വീരരും ശൂരരായാലും പുരുഷത്വമില്ലാത്തവർ (൯൱൬)

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.   (௯௱௭ - 907)
 

ഭാര്യാനിയോഗമെപ്പോഴും ശിരസാനിർവഹിച്ചിടും ദാസൻറെ പൗരുഷത്തേക്കാൾ പെണ്ണിൻറെ പെണ്മ വിശിഷ്ടമാം (൯൱൭)

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.   (௯௱௮ - 908)
 

ഭാര്യാവിധേയനായുള്ളോൻ സ്നേഹമുള്ള ജനങ്ങൾക്ക് സേവനം ചെയ്തിടാ; സ്വന്തം കടപ്പാടും ത്യജിച്ചിടും (൯൱൮)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.   (௯௱௯ - 909)
 

പത്നിക്കനുസരിപ്പോരിൽ ധർമ്മവും ദ്രവ്യലാഭവും നന്മചെയ്യും മനോഭാവമൊന്നുമേ ദൃശ്യമായിടാ (൯൱൯)

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.   (௯௱௰ - 910)
 

സ്വധർമ്മബോധവും വേണ്ടും ധനശേഷിയുമുള്ളവർ ഭാര്യാവാത്സല്യദോഷങ്ങൾ ബാധിക്കുന്നില്ലൊരിക്കലും (൯൱൰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: வசந்தா  |  തല: ஆதி
பல்லவி:
இல்லாளை அஞ்சி ஏனோ வாழ்கின்றாய் நீ
இப்படியுமா உலகில் ஏழையாகித் தாழ நின்றாய்

அநுபல்லவி:
நல்லார்க்கு நல்ல செயல் செய்திடவும் அஞ்சுகின்றாய்
நாணிக் கோணி மனையாளை நாளும் நாளும் கெஞ்சு கின்றாய்

சரணம்:
பட்டம் பெற்றாலும் என்ன பதவியில் உயர்ந்தும் என்ன
பாரினில் தேவரைப் போல் பாங்குடன் வாழ்ந்தும் என்ன
நட்டார் குறை முடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகுபவர் பேரே கெடும் இதனால்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்தெனும் குறள் சொல்லிதை
எண் சேர்ந்த நெஞ்சத் திடனுடையாரைச் சேர்ந்திடுக
பெண்சேர்ந்த பேதைமையை இன்றே நீ கைவிடுக




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22