സംസ്കാരം

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.   (௯௱௯௰௧ - 991)
 

ഔഡത്യദോഷമില്ലാതെ വിനയം സ്പഷ്ടമാകുകിൽ സംസ്ക്കാരസമ്പത്തുള്ളോനായ് ലോകരാൽ കരുതപ്പെടും (൯൱൯൰൧)

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.   (௯௱௯௰௨ - 992)
 

ജനനം സൽകുലത്തിങ്കൽ, സ്നേഹമായുള്ള നീക്കവും രണ്ടും സംസ്ക്കാരപൂർണ്ണൻറെ ഗുണമായറിയപ്പെടും (൯൱൯൰൨)

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.   (௯௱௯௰௩ - 993)
 

ശാരീരികയോജിപ്പിനാൽ ബന്ധം നിൽക്കാജനങ്ങളിൽ; നിലനിൽക്കുന്നതാം ബന്ധം സംസ്ക്കാരത്തിൻറെ സാമ്യമാം (൯൱൯൰൩)

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.   (௯௱௯௰௪ - 994)
 

നീതിയും നന്മയും കാത്ത് ജനങ്ങൾക്കുപകാരിയായ് വാഴും സംസ്കൃതരായോരെ ലോകമെന്നും പുകഴ്ത്തിടും (൯൱൯൰൪)

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.   (௯௱௯௰௫ - 995)
 

കേളിയായുമികഴ്ത്തീടിൽ വേദനക്കിടയായിടും സംസ്കൃതൻ ശത്രുവായാലുമൊഴിക്കും പരനിന്ദകൾ (൯൱൯൰൫)

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.   (௯௱௯௰௬ - 996)
 

ഉലകം നിലനിൽക്കുന്നു സജ്ജനങ്ങളിരിക്കയാൽ; അവർകൾതന്നഭാവത്തിൽ ലൗകീകം മണ്ണടിഞ്ഞിടും (൯൱൯൰൬)

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.   (௯௱௯௰௭ - 997)
 

സജ്ജനോചിതമായുള്ള ഗുണപുഷ്ടിയിരാതവർ അരംപോലറിവായാലും മരംപോൽ ഗണനീയരാം (൯൱൯൰൭)

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.   (௯௱௯௰௮ - 998)
 

സഹവാസത്തിനാകാത്ത ദുർജജനങ്ങളോടാകിലും മാന്യമായ് പഴകീടാഞ്ഞാൽ സജ്ജനം വേദനിച്ചിടും (൯൱൯൰൮)

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.   (௯௱௯௰௯ - 999)
 

സജ്ജനസഹവാസത്താലാനന്ദം തോന്നിടായ്കിലോ ഒളിയേറും പകൽ ലോകമിരുളേന്തുന്ന പോലെയാം (൯൱൯൰൯)

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.   ( - 1000)
 

ദുർജ്ജനത്തിൻ ധനം ലോകർക്കൊരുനാളും ഗുണം തരാ ഭാജനം ശുദ്ധമല്ലാഞ്ഞാൽ നല്ലപാൽ കെട്ടുപോയിടും (൲)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

രാഗ: கல்யாணி  |  തല: ரூபகம்
பல்லவி:
பண்பு கொண்டு வாழ வேண்டுமே - நல்ல
பண்பு கொண்டு வாழ வேண்டுமே

அநுபல்லவி:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கின் பங்கினைக் கண்டும்

சரணம்:
அரம் போலும் கூர்மையுடையோர் ஆன போதிலும்
அழகாகவே உடலுறுப்புகள் அமைந்திருந் தாலும்
மரம் போல்வர் மக்கள் பண்பில்லாதவர் என்னும்
மாறில்லாமல் பகைவருள்ளும் மலர்ந்திட நண்ணும்

பகற் காலமும் இரவாகிடும் பாலும் நஞ்சாகும்
பண்பில்லாதார் செல்வமும் அதுபோலவே காணும்
புகழும் நயனுடையார் நன்றி புரியும் தன்மையால்
பூமி உள்ளது என்னும் உண்மையைப் புகலும் குறளதால்




ജനപ്രിയമായ അധ്യായം

ജനപ്രിയമായ ഈരടി

ഈരടിയിലെ ആവർത്തിക്കപ്പെട്ട പദം
തിരുക്കുറലിലെ ഏറ്റവും കൂടുതൽ ആവർത്തിച്ച പദം
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

ഈരടിയുടെ ആരംഭത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ ആദ്യ വാക്ക്
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

ഈരടിയുടെ അവസാനത്തിൽ ആവർത്തിച്ചുള്ള വാക്ക്
ഈരടിയിലെ ഏറ്റവും സാധാരണമായ അവസാന വാക്ക്
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22