என்ன விலங்குகளிலும் யானை உருவத்தில் மிகப் பெரியது. அதோடு கூர்மையான தந்தங்களை பெற்றிருக்கிறது. ஆனால், சிறிய உருவத்தை உடைய புலி, தாக்க வரும் பொழுது யானை பயந்து விடும். யானைக்கு உடல் பெரியது. புலிக்கு வலிமை அதிகம்.
அதுபோல, ஒரு அரசன் மிகுந்த உடல் வலிமையும், படைபலமும் கொண்டிருந்தாலும், அவனைக் காட்டிலும் ஊக்கம் உடைய சிற்றரசன் தாக்க வருவானானால், அவனைக் கண்டு பயப்படுவான்.
ஆகையால், ஊக்கம் மிகவும் அவசியம் என உணர்த்தப்படுகிறது.