Raga: குந்தலவராளி | Tala: ஆதி பல்லவி:ஆனாலும் உமக்கிந்த மறதி ஆகாது
ஐயா வெகுளியினும் இது மிகத் தீது
அநுபல்லவி:போனால் உயிர் வருமோ பொருளும் பயன் தருமோ
புகழும் செயல்கள் செய்ய மறப்பதுவும் தகுமோ
சரணம்:கிளையை வளர விட்டுப் பயிரையே அழிப்பதா
கண் மண் தெரியாமலே பலரையும் பழிப்பதா
விளைவை எண்ணிப் பாராமல் வீண்காலம் கழிப்பதா
வீட்டிற்கு வேண்டியதைக் கேட்டபின் விழிப்பதா
அச்சமுடையவர்க்கே அரண் எங்குமில்லை
அறிவுக்கும் அழகுக்கும் வறுமையால் தொல்லை
பொச்சாப் புடையவர்க்கும் நன்மையே இல்லை
புரிந்து முன் காக்க வேண்டும் திருக்குறள் சொல்லை