దండనీతి

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.   (௫௱௪௰௧ - 541)
 

బంధుమిత్రు లనెడు పక్షపాతము లేక
నుండదగిన దగును దండనీతి. (౫౪౧)

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.   (௫௱௪௰௨ - 542)
 

మబ్బు జూచు బ్రతుకు మహిజీవరాసులు
ప్రజలు నృపుని జూచి బ్రతుకు చుంద్రు. (౫౪౨)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.   (௫௱௪௰௩ - 543)
 

వేదశాస్త్రములకు విప్రాళికెల్లను
దండనీతి యందె యుండు రక్ష. (౫౪౩)

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.   (௫௱௪௰௪ - 544)
 

భుజము దట్టి ప్రజల బుజ్జగించెడు రాజు
పదములందె భక్తి ప్రజల కుండు. (౫౪౪)

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.   (௫௱௪௰௫ - 545)
 

నీతి దప్పనట్టి నృపుండున్న రాజ్యన
కాలవర్షముండు కరువు దీరు. (౫౪౫)

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.   (௫௱௪௰௬ - 546)
 

ఖడ్గబలము కన్నఁగ్రమము కనికరమ్మె
భువన విజయమిచ్చు నవని పతికి. (౫౪౬)

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.   (௫௱௪௰௭ - 547)
 

ప్రజలకెల్ల రాజు భద్రమైనట్లుగా
దండనీతిగాపు ధరణి పతికి. (౫౪౭)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.   (௫௱௪௰௮ - 548)
 

సకల మాలకించు సరళత లేకున్న
నీతి దొరగి రాజు గోతిఁబడును. (౫౪౮)

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.   (௫௱௪௰௯ - 549)
 

బాధ దీర్చుటకయి బాధించునది గాన
రాచకర్మ దుష్ట రక్షణమ్ము. (౫౪౯)

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.   (௫௱௫௰ - 550)
 

మానవేంద్రుఁడిచ్చు మరణశిక్ష ఫలము
వైరున కలువెత్తు వంటిదగును. (౫౫౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கல்யாணி  |  Tala: ஆதி
பல்லவி:
நீதியின் திருமுகமே - செங்கோன்மை
நிலைபெற விளங்கிடுமே
நினைவுறும் மாந்தர்கள்
அனைவரும் சமமெனும்

அநுபல்லவி:
ஆதியாய் அரசாளும் உலகினிலே
ஆதரவாகவே
அறவோர்கள் சூழவே

சரணம்:
விளைவும் மழையும் ஒன்றாய்க்கூடும் தன்னாலே
வேலினும் கொலே வெற்றி அளிக்கும் முன்னாலே
வளையாமலே நாளும் வளரும் பண்பாலே
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடும்
மன்னவன் முன்னவனாக வணங்கிடும்

குடி புறங் காத்தோம்பி குற்றமே கடிதல்
வடு வன்று வேந்தன் தொழில் எனும் குறளறிதல்
கொடியோர் தமை ஒறுத்தே இறை முறை புரிதல்
கொற்றம் விளங்கிட நற்றுணை நின்றிடும்
பெற்ற தன்னாட்சியைப் பேருலகேத்திடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22