Raga: ஆரபி | Tala: ஆதி பல்லவி:புல்லாதிராப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்பம் சிறிது
அநுபல்லவி:நல்லார்க்கிது நல்ல பாடம்
நாயகியாள் ஆட்சி பீடம்
வல்லாண்மையும் வளைந்து கொடுக்கும்
வாயிலில் கையேந்தி நிற்கும்
சரணம்:துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்றே அதுவாகும்
இனிதாகிய நீரும் நிழலும் போல்
இணைந்தவர் ஊடலே இங்கிதம் காண்பதால்
ஊடல் உணவில் சேர் உப்பினைப் போன்றது
உள்ள அளவினில் மீறிக் கூடாதது
நீடலாமோ தலைவி! ...... புலவி
நேரம் அறிந்து செல் சாரம் அறிந்துகொள்