దుర్జన సాంగత్యము

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (௪௱௫௰௧ - 451)
 

వెద్దటికము వెఱచు బుద్ధిహీనుల గూడ
చిన్నరికము వారి జేయిఁ గలువు (౪౫౧)

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.   (௪௱௫௰௨ - 452)
 

నేల నంటి యుండు నీటిరంగును బోలు
కూడు వారినంటి గుణములుండు. (౪౫౨)

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.   (௪௱௫௰௩ - 453)
 

చిత్తమందె దోచు నుత్తమ గుణరాశి
స్నేహమందు వెఱిగి చిగురువేయు. (౪౫౩)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.   (௪௱௫௰௪ - 454)
 

మంచికెల్ల జూడఁ మనసె కారణమైన
చెలిమిలోనె దాని జెప్ప వలయు. (౪౫౪)

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.   (௪௱௫௰௫ - 455)
 

చేరిక యెటులుండు చిత్తమట్లుండును
చిత్త మెట్లొ యట్లు చేష్టలుండు. (౪౫౫)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   (௪௱௫௰௬ - 456)
 

సజ్జన సహవాస సంపర్కముల వల్ల
మనసు మంచి మార్గ మనుసరించు. (౪౫౬)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   (௪௱௫௰௭ - 457)
 

చిత్తశుద్ధి మోక్షసిద్ధికి మూలమ్ము
స్నేహశుద్ధి సకల శ్రీలనిచ్చు. (౪౫౭)

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௮ - 458)
 

ఆత్మశుద్ధి నున్న నాచార్యులకునైన
సంఘ శుద్ధి వలన సర్వసిద్ధి. (౪౫౮)

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௯ - 459)
 

మనసు మంచిదైన మరుజన్మకును మంచి
మించు నింక చెలిమి మంచిదైన (౪౫౯)

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.   (௪௱௬௰ - 460)
 

మంచివారి గూడ మంచి మంచమునెక్కు
చెడ్డవారి గూడఁ జెడుపె మిగులు. (౪౬౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: மிஸ்ரசாப்பு
பல்லவி:
எல்லாப் புகழும் தரும் இனநலமே - மக்கள்
இன்னுயிர்க் காக்கம் தரும் மனநலமே

அநுபல்லவி:
நல்லாரினத்தின் துணை நாளும் நன்மை பயக்கும்
அல்லாத சிற்றினத்தை
அஞ்சும் பெருமையில் நெஞ்சம் தனித்திடும்

சரணம்:
பார்க்கின்ற தண்ணீரெல்லாம் பருகும் நன்னீராகுமோ
சேர்க்கும் இனங்கள் எல்லாம் சிறப்பில் ஒன்றாய் வருமோ
நீர்க்குள்ள தன்மையை நிலத்தால் அறிந்து சொல்வோம்
நினைக்கும் இனத்தைக் கொண்டே மனத்தைப் புரிந்து கொள்வோம்

மனமும் இனமும் மக்கள் வாழ்வின் உயர் நிலைகள்
மதியும் நிதியாக மதிக்கச் செய்யும் பொருள்கள்
மன நலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்புடைத்தெனும் திருக்குறள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22