உள்ளத்திலே அன்பு இல்லாவிட்டால், உடம்பானது பயனில்லாத எலும்புக்கூடாகும்.
அன்பின் தோற்றமே சிறப்பான உயிர் தோற்றம்.
அன்பு இல்லாத வாழ்வு செத்த பிணத்தை போன்றது.
ஒருவன் வாழும் போது, உடல் வளர்ச்சியை மட்டும் கவனிக்காமல், அன்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
தானும் நன்மை அடைந்து, இடம் பொருள் ஏவலினால் இயன்றவரை பிறருக்கு நன்மை செய்து, உபயோகமான வாழ்க்கை வாழவேண்டும்.