கணவன்- மனைவிக்கு, குழந்தைகள் மிகப்பெரிய செல்வம். நீளம், வீடு, பணம், பதவி, புகழ் எல்லாம் இருந்தும், குழந்தைகள் இல்லையானால் என்ன பயன்?
பெற்றோர் உணவு உண்ணும்பொழுது, உடன் இருக்கின்ற தங்கள் குழந்தை, தன் பிஞ்சு விரலால், உணவை கூழ்போல் குழப்பி, அவர்களிடம் கொடுத்தால் அது அமுதத்தை விட மேலாக இருக்கும்.
("வயதான காலத்தில் கஷ்டப்படும்பொழுது, தங்கள் பிள்ளைகள் சம்பாதித்து கூழோ அல்லது கஞ்சியோ, பெற்றோர்களுக்கு அளித்தால் அது அவர்களுக்கு அமுதத்தை காட்டிலும் இனிமையாக இருக்கும்" என்று கருதினால் அதுவும் பொருந்தலாம்.)