ಪುರುಷ ಯತ್ನ ಪಡೆದಿರುವುದು

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.   (௬௱௰௧ - 611)
 

ಇದು ಮುಗಿಸಲು ಕಷ್ಟಸಾಧ್ಯವಾದುದು ಎಂದು ಅಧೀರತೆಗೊಳಗಾಗಬಾರದು; ಪ್ರಯತ್ನದಿಂದ ಹಿರಿಮೆಯು ಲಇಸುತ್ತದೆ. (೬೧೧)

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.   (௬௱௰௨ - 612)
 

ಕೆಲಸವನ್ನು ಪೂರ್ತಿಮಾಡದೆ ಅರ್ಧದಲ್ಲಿ ಕೈಬಿಟ್ಟವರನ್ನು ಲೋಕವೂ ಕೈಬಿಡುವುದು; ಅದರಿಂದ ಹಿಡಿದ ಕೆಲಸದಲ್ಲಿ ಬರುವ ಎಡರುತೊಡರುಗಳನ್ನೂ ಲಕ್ಷ್ಯದಲ್ಲಿಟ್ಟುಕೊಳ್ಳಬೇಕು. (೬೧೨)

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.   (௬௱௰௩ - 613)
 

ಪರೋಪಕಾರವೆನ್ನುವ ಸಿರಿಯು, ಮಾನುಷ ಪ್ರಯತ್ನವೆನ್ನುವ ಹಿರಿಯ ಗುಣದಲ್ಲಿ ನೆಲಸಿರುವುದು. (೬೧೩)

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.   (௬௱௰௪ - 614)
 

ಮನುಷ್ಯ ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದವನ ಪರೋಪಕಾರವು, ಹೇಡಿಯು ಕೈಯಲ್ಲಿ ಕತ್ತಿ ಹಿಡಿದು ಬಲ್ಲಾಳ್ತನವನ್ನು ತೋರಿದಂತೆ ವ್ಯರ್ಥವಾಗುವುದು. (೬೧೪)

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.   (௬௱௰௫ - 615)
 

ತನ್ನ ಸುಖವನ್ನು ಬಯಸದೆ, ಕೈಕೊಂಡ ಕೆಲಸವನ್ನು ಪ್ರೀತಿಸುವವನು ತನ್ನ ಬಂಧುಗಳ ಸಂಕಟವನ್ನು ತೊಡೆದು ಹಾಕಲು ತಾಳಿನಿಲ್ಲುವ ಆಧಾರ ಕಂಬವಾಗುವನು. (೬೧೫)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.   (௬௱௰௬ - 616)
 

ಪ್ರಯತ್ನದಿಂದ ಸಿರಿಯು ಬೆಳೆಯುವುದು; ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದಿದ್ದರೆ ದಾರಿದ್ರ್ಯವು ಹೋಗುವುದು. (೬೧೬)

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.   (௬௱௰௭ - 617)
 

ಒಬ್ಬನ ಆಲಸ್ಯದಲ್ಲಿ ದರಿದ್ರಲಕ್ಷ್ಮಿ ನೆಲಸಿ ಆಳುವಳು. ಆಲಸ್ಯವಿಲ್ಲದವನ ಪ್ರಯತ್ನದಲ್ಲಿ ಭಾಗ್ಯಲಕ್ಷ್ಮಿ ನೆಲೆಸುವಳು ಎಂದು (ಬಲ್ಲವರು) ಹೇಳುತ್ತಾರೆ. (೬೧೭)

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.   (௬௱௰௮ - 618)
 

ದಾರಿದ್ರ್ಯವು ಯಾರಿಗೂ ದೋಷವಲ್ಲ; ಅರಿವಿನಿಂದ ವಿಚಾರಮಾಡಿ ಪ್ರಯತ್ನ ಮಾಡದಿದ್ದರೆ ಅದು ದೋಷವಾಗುವುದು. (೬೧೮)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.   (௬௱௰௯ - 619)
 

ದೈವವಿಧಿಯ ಕಾರಣದಿಂದ ಒಂದು ಕೆಲಸ ಫಲಿಸದೆ ಹೋದರೂ ಪ್ರಯತ್ನವು ತನ್ನ ಶರೀರಶ್ರಮದ ಕೂಲಿಯಾಗಿ ಫಲವನ್ನು ನೀಡುತ್ತದೆ. (೬೧೯)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.   (௬௱௨௰ - 620)
 

ದಣೆವಿಲ್ಲದೆ, ಎದೆಗುಂದದೆ ಪ್ರಯತ್ನಶೀಲರಾಗಿರುವವರು (ತಮ್ಮನ್ನು ಕಾಡುವ) ವಿಧಿಯನ್ನು ತಮ್ಮ ಬೆನ್ನ ಹಿಂದೆ ಕಾಣುವರು. (ವಿಧಿಯಿಂದ ಪಾರಾಗುವರು) (೬೨೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அம்சாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
ஆள்வினை உடைமையே அயர்வில்லா முயற்சி - மக்கள்
அரசு விளங்க வரும் புதுமலர்ச்சி உலகில்

அநுபல்லவி:
வாள்வலி யோடுதம் தோள் வலியும் சிறக்கும்
வையகம் வாழ்வுறவே செய்யும் தொழில் நிறக்கும்

சரணம்:
உறங்கிடுவோன் முகத்தில் உறும் கரும் மூதேவி
உழைப்பவன் தாளினில் உறைவாள் சீதேவி
திறங்கொள்ளும் நன் முயற்சித் திருனைவியாக்கு மன்றோ
தேர்ந்த உழைப்பினைப் போல்சிறக்கும் பொருள் வேறுண்டோ

தாளாண்மை யுள்ளான் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னும் செருக்கதும் இங்குற்றே
கேளாரும் கேட்கவே குறள் முர சொலிக்கும்
கேளிர் துன்பம் துடைக்கும் தூணாகவும் நிலைக்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22