ಪರಸ್ತ್ರೀಯರನ್ನು ಬಯಸದಿರುವುದು

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.   (௱௪௰௧ - 141)
 

ಪರನ ಒಡವೆಯಾಗಿರುವ ಹೆಂಡತಿಯನ್ನು ಅಪೇಕ್ಷಿಸಿವುದು ತಿಳಿಗೇಡಿತನ; ಧರ್ಮ ಅರ್ಥಗಳನ್ನು ಬಲ್ಲವರಲ್ಲಿ ಈ ಗುಣವಿಲ್ಲ (೧೪೧)

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.   (௱௪௰௨ - 142)
 

ಧರ್ಮವನ್ನು ಮೀರಿ ನಿಂತವರಲ್ಲಿ, ಪರನ ಹೆಂಡತಿಯನ್ನು ಬಯಸಿ ಬೇರೊಬ್ಬನ ಮನೆ ಬಾಗಿಲಲ್ಲಿ ನಿಂತವನಷ್ಟು ಮೂರ್ಖ ಬೇರೆ ಇಲ್ಲ. (೧೪೨)

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.   (௱௪௰௩ - 143)
 

ನಂಬಿದವರ ಮಡದಿಯಲ್ಲಿ ಕೇಳೆಣಿಸಿ ನಡದುಕೊಳ್ಳುವವರು, ನಿಶ್ಚಯವಾಗಿ ಒದುಕ್ಕಿದ್ದೂ ಸತ್ತವರ ಹಾಗೆ. (೧೪೩)

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.   (௱௪௰௪ - 144)
 

ಸ್ವಲ್ಪವೂ ವಿವೇಚಿಸದೆ ಪರರ ಹೆಂಡತಿಯನ್ನು ಸೇರುವವರು ಎಷ್ಟು ದೊಡ್ಡವರಾದರೇನು (೧೪೪)

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.   (௱௪௰௫ - 145)
 

ಸುಲಭವಾಗಿ ಸಿಕ್ಕಿದಳೆಂದು ಪರಸತಿಯನ್ನು ಕೂಡುವವನು, ಯಾವಾಗಲೂ ಅಳಿಯದೆ ಉಳಿವ ನಿಂದೆಗೆ ಗುರಿಯಾಗುತ್ತಾನೆ. (೧೪೫)

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.   (௱௪௰௬ - 146)
 

ಹಗೆ, ಪಾಪ, ಭೀತಿ, ನಿಂದೆ ಎಂಬ ನಾಲ್ಕೂ ಪರಸತಿಯನ್ನು ಕೂಡುವವನನ್ನು ಬಿಟ್ಟು ಹೋಗುವುದಿಲ್ಲ. (೧೪೬)

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.   (௱௪௰௭ - 147)
 

ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆವ ಗೃಹಸ್ಥನೆಂದರೆ, ಪರಸ್ತ್ರೀಯ ಅಂಗಲಾವಣ್ಯವನ್ನು ಬಯಸದಿರುವವನೇ (೧೪೭)

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.   (௱௪௰௮ - 148)
 

ಪರರ ಹೆಂಡತಿಯನ್ನು ನೋಡದ ಹಿರಿಯ ಕೆಚ್ಚು, ನಂಪನ್ನರಿಗೆ ಧರ್ಮಮಾತ್ರವಲ್ಲದೆ ಪರಿಪೂರ್ಣ ನಡತೆಯೂ ಆಗುತ್ತದೆ (೧೪೮)

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.   (௱௪௰௯ - 149)
 

ಭೀಕರ ಕಡಲು ಆದರಿಸಿದ ಈ ಲೋಕದಲ್ಲಿ ಕೀರ್ತಿಶಾಲಿಗಳು ಯಾರೆಂದರೆ, ಪರರ ಹಕ್ಕಿನ ಹೆಂಡತಿಯ ತೋಳ್ತೆಕ್ಕೆಯಲ್ಲಿ ಸೇರದವರು (೧೪೯)

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.   (௱௫௰ - 150)
 

ಧರ್ಮದ ಎಲ್ಲೆಯನ್ನು ಮೀರಿ ಅಲ್ಲದ್ದನ್ನು ಮಾಡಿದರೂ ಪರಸ್ತ್ರೀಯ ಅಂಗಲಾವಣ್ಯವನ್ನು ಬಯಸದಿರುವುದು ಒಳ್ಳೆಯದು. (೧೫೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுத்த தந்யாசி  |  Tala: ஆதி
பல்லவி:
பிறனில் விழையாதே - என்றும்
பெருமையை இழக்காதே - நண்பா

அநுபல்லவி:
அறனில்லை இதில் ஆண்மைக்கழகே இல்லை
அன்போ சிறிதும் இல்லை துன்பங்களே தொடரும்

சரணம்:
எத்தனை செல்வம் சீர் சிறப்பிருந்தாலும்
இவர் கனவான் என எவர் புகழ்ந்தாலும்
அத்தனையும் கெடுக்கும் அயல்மனை ஆசை
அகற்றிடு அகற்றிடு உன் மனமாசை

பகை பழிபாவம் அச்சத்தைக் கூட்டும்
பண்புள்ள நண்பரும் பதைத்திட வாட்டும்
தகைமை இல்லாதது தாழ்வு நிலையிது
தன்னுயிர்த் துணைவியைத் தவித்திடச் செய்வது

பிறன்மனை நோக்காப் பெயர் பெறும் ஆண்மை
பெற்றவனாவதில் உனக்குள்ள மேன்மை
திறன்மிக அறமும் நல்லொழுக்கமும் கூடும்
தீவினை உனை விட்டே தூரத்தில் ஓடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22