ಸ್ಥಲ ಪರಿಜ್ಞಾನ

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.   (௪௱௯௰௧ - 491)
 

(ಶತ್ರುವನ್ನು) ಮುತ್ತುವುದಕ್ಕೆ ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳದೆ (ಅರಸನಾದವನು) ಅವನಿಗೆ ಎದುರಾಗಿ ಯಾವ ಕಾರ್ಯದಲ್ಲೂ ತೊಡಗಬಾರದು; ಹಗೆಯನ್ನು ನಿಂದಿಸಲೂ ಬಾರದು. (೪೯೧)

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.   (௪௱௯௰௨ - 492)
 

ಯುದ್ದಕುಶಲಿಗಳಾದ ಶಕ್ತಿವಂತರಿಗೂ, ಭದ್ರವಾದ ಕೋಟೆಯ ರಕ್ಷಣೆಯಿದ್ದರೆ, ಅದರಿಂದುಂಟಾಗುವ ಲಾಭಗಳು ಹಲವು. (೪೯೨)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.   (௪௱௯௰௩ - 493)
 

ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನು ನೋಡಿ, ತಮ್ಮನ್ನು ಕಾದುಕೊಂಡು ಹಗೆಗಳನ್ನು ಎದುರಿಸಿ ಹೋರಾಡಿದರೆ, ಶಕ್ತಿ ಇಲ್ಲದವರೂ ಶಕ್ತಿವಂತರಾಗಿ ಗೆಲ್ಲುವರು. (೪೯೩)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.   (௪௱௯௰௪ - 494)
 

ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನು ಅರಿತು (ಹಗೆಗಳನ್ನು) ಸಮೀಪಿಸಿ ಹೋರಾಡುವವರಾದರೆ, ಅವರನ್ನು ಗೆಲ್ಲಲು ಬಗೆದು ಬಂದ ಹಗೆಗಳೂ ತಮ್ಮ ಆಲೋಚನೆಯನ್ನು ಕೈಬಿಡುವರು. (೪೯೪)

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.   (௪௱௯௰௫ - 495)
 

ಆಳವಾದ ಹೊನಲಿನಲ್ಲಿ (ನೀರಲ್ಲಿ) ಇತರ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಗೆಲ್ಲುವ ಮೊಸಳಿ ಆ ಹೊನಲಿನಿಂದ ತಪ್ಪಿ ಹೊರಬಂದರೆ, ಅದನ್ನು ಇತರ ಪ್ರಾಣಿಗಳು ಗೆದ್ದುಬಿಡುತ್ತವೆ. (೪೯೫)

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.   (௪௱௯௰௬ - 496)
 

ಬಲವಾದ ಚಕ್ರಗಳುಳ್ಳ ದೊಡ್ಡ ತೇರು ಕಡಲಿನಲ್ಲಿ ಓಡಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ; ಕಡಲಿನಲ್ಲಿ ಓಡುವ ನಾವೆಗಳೂ ನೆಲದಲ್ಲಿ ಓಡಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. (೪೯೬)

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்   (௪௱௯௰௭ - 497)
 

ದೋಷವಿಲ್ಲದೆ, ಆಲೋಚಿಸಿ, ತಕ್ಕ ಸ್ಥಳದಲ್ಲಿ ಮಾಡಬೇಕಾದ ಕೆಲಸವನ್ನು ಕೈಕೊಂಡರೆ. ಧೈರ್ಯವೊಂದಲ್ಲದೆ ಬೇರೆ ಸಾಧನದ ಅಗತ್ಯವಿಲ್ಲ. (೪೯೭)

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.   (௪௱௯௰௮ - 498)
 

ಕಿರಿದಾದ ಪಡೆ ನಿಲ್ಲಬೇಕಾದ ಎಡೆಯಲ್ಲಿ ಹಿರಿದಾದ ಪಡೆ ಆಕ್ರಮಿಸಿದರೆ, ಆ ಪಡೆಯ ಬಲ ನಾಶವಾಗುತ್ತದೆ. (೪೯೮)

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.   (௪௱௯௰௯ - 499)
 

ಹಗೆಗಳಿಗೆ ಕೋಟೆ ಮೊದಲಾದ ರಕ್ಷಣೆ, ಸೇನಾಬಲಗಳು ಇಲ್ಲವಾದರೂ ಅವರ ಸ್ವಂತ ನೆಲದಲ್ಲಿ ಹೊಕ್ಕು ಅವರೊಂದಿಗೆ ಹೋರಾಡುವುದು ಅಸಾಧ್ಯ. (೪೯೯)

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.   (௫௱ - 500)
 

ವೀರಯೋಧನಂತಿರುವ ಧೈರ್ಯಶಾಲಿಯಾದ ಆನೆ ಕೂಡ ಕಾಲು ಹುಗಿಯುವ ಕೆಸರು ಮಣ್ಣಿನಲ್ಲಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದಾಗ, ನರಿಗಳು ಅದನ್ನು ಕೊಂದುಬಿಡುತ್ತದೆ. (೫೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்தோளம்  |  Tala: கண்ட ஆதி
பல்லவி:
நிலையான இடம் கண்டோம் நெஞ்சே - இனி
நேர்வரும் பகை யெல்லாம்
நெருப்பின் முன் பஞ்சே

அநுபல்லவி:
குலையாத வலிவோடு காலமும் கண்டு
கூடித் தொழில் செய்யவே
குடியாட்சி இடம் கொண்டு

சரணம்:
நீரினில் வலிவுள்ள முதலைபோல் படகு போல்
நிலத்தினில் வலிவுள்ள யானைபோல் தேர் போல்
சீரிடம் மாறாத செயல்திறமே பெருக
செல்லு மிடத்தில் மக்கள் சிறப்புறவே வருக

"எண்ணியார் எண்ணமிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்" என்னும் குறள் புரிந்து
திண்ணியராக நாட்டின் தேவைக்கே உழைப்போம்
தீமையெல்லாம் ஒழித்தே நன்மையில் தழைப்போம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22