ಪ್ರೀತಿ ಪರತೆ

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.   (௭௰௧ - 71)
 

ಪ್ರೀತಿಯನ್ನು ಅಡಗಿಸಿಡುವ ಕೀಲಿ ಉಂಟೇ? ಪ್ರೀತಿಯುಳ್ಳವರ ಕಿರು ಕಣ್ಣೀರು (ಅವರೆದೆಯಲ್ಲಿರುವ ಪ್ರೀತಿಯ) ಸಾಕ್ಷಿಯಾಗಿ ಹಲವರರಿಯುವಂತೆ ಮಾಡವುದು. (೭೧)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ - 72)
 

ಪ್ತೀತಿ ಇಲ್ಲದವರು ಎಲ್ಲಾ ತಮ್ಮದು ಎಂದು ತಿಳಿಯುವರು; ಪ್ರೀತಿಯುಳ್ಳವರು ತಮ್ಮ ಶರೀರವೂ (ಎಲುಬು) ಪರರಿಗಾಗಿದೆ ಎಂದು ತಿಳಿಯುವರು. (೭೨)

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.   (௭௰௩ - 73)
 

ಪ್ರೀತಿಯಿಂದ ಸೇರಿ ಬಾಳಿದ ಫಲವೇ ಶರೀರದೊಂದಿಗೆ ಜೀವಿಗೆ ಇರುವ ಸಂಬಂಧ ಎಂದು ಹೇಳುತ್ತಾರೆ. (೭೩)

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.   (௭௰௪ - 74)
 

ಪ್ರೀತಿ, (ಇತರರೊಂದಿಗೆ ಬಾಳ ಬಯಸುವ) ಸಹೃದಯತೆಯನ್ನುಂಟುಮಾಡುವುದು. ಸಹೃದಯತೆಯು ಸ್ನೇಹವೆಂಬ ಅಳವರಿಯದ ಹಿರಿಮೆಯನ್ನು ತರುವುದು. (೭೪)

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.   (௭௰௫ - 75)
 

ಈ ಲೋಕದಲ್ಲಿ ಸುಖವನ್ನು ಹೊಂದಿ ಬಾಳುವವರು, ಮುಂದೆ ಮೇಲು ಲೋಕದಲ್ಲಿ ಪಡೆಯುವ ಹಿರಿಮೆಯು ಅವರ ಪ್ರೀತಿ ಮೂಲವಾದ ಬಾಳಿನ ಫಲವೆಂದು ಹೇಳುವರು. (೭೫)

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.   (௭௰௬ - 76)
 

ಅರಿಯದವರು ಪ್ರೀತಿ ಧರ್ಮಕ್ಕೆ ಮಾತ್ರ ಆಧಾರವೆನ್ನುವರು. ಆದರೆ ಪರಿಶೀಲಿಸಿ ನೋಡಿದರೆ ವೀರಕ್ಕೂ ಅದೇ ಆಧಾರವೆಂದು ತಿಳಿಯುವುದು. (೭೬)

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.   (௭௰௭ - 77)
 

ಎಲುಬಿಲ್ಲದ ಹುಲು ಜೀವಿಗಳನ್ನು (ಹುಳುಗಳನ್ನು) ಬಿಸಿಲು ಸುಡುವಂತೆ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದವರನ್ನು ಧರ್ಮವು ಸುಡುತ್ತದೆ. (೭೭)

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.   (௭௰௮ - 78)
 

ಮನದೊಳಗೆ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದೆ ಬಾಳುವವರ ಜೀವನ, ಕಡು ಮರಳುಕಾಡಿನೊಳಗೆ ಒಣಗಿದ ಮರ ಚಿಗುರಿದಂತೆ. (೭೮)

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.   (௭௰௯ - 79)
 

ಶರೀರದ ಒಳ ಅಂಗವಾದ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದಿದ್ದರೆ, ಶರೀರದ ಹೊರ ಅಂಗಗಳೆಲ್ಲ ಇದ್ದೂ ಏನು ಮಾಡಬಲ್ಲುವು? (ಅವುಗಳಿದ್ದೂ ವ್ಯರ್ಥ) (೭೯)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   (௮௰ - 80)
 

ಪ್ರೀತಿ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವ ಶರೀರವೆ ಜೀವಂತ ಶರೀರ (ಉಸಿರು ದಾಣ) ವಾಗಿರುವುದು. ಅದಿಲ್ಲದವರ ಶರೀರವು ಎಲುಬಿಗೆ ತೊಗಲು ಹೊದಿಸಿದಂತೆ. (೮೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: லதாங்கி  |  Tala: ஆதி
பல்லவி:
அன்பு வாழ்வில் வேண்டுமே - மெய்
அறிவு விளங்கும் வழியிதாமே

அநுபல்லவி:
என்பில்லாத புழுவைக் காயும்
ஏறும் வெய்யில தனைப்போல
அன்பில்லாத உயிரை வருத்தும்
அறத்தின் தன்மை ஆதலாலே

சரணம்:
உள்ளத் தன்பில்லாத பேர்க்கே உடலுறுப்பால் பயனுண்டாமோ
உண்மை அன்பை ஈனும் ஆர்வம் உடைமை பெருமை தள்ளலாமோ
கொள்ளத் தகுந்த அறமும் மறமும் கூட்டுகின்ற தன்மையாலே
உள்ள உயிரின் நிலையைக் காட்டும் உலகம் மகிழும் பணிகளாற்றும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22