ತಿಳಿದು ವರ್ತಿಸುವ ಬಗೆ

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.   (௪௱௬௰௧ - 461)
 

ಒಂದು ಕೆಲಸಕ್ಕೆ ತೊಡಗುವ ಮುನ್ನ, ಆ ಕೆಲಸದಿಂದ ಉಂಟಾಗುವ ವ್ಯಯವನ್ನೂ ಬರುವ ಆದಾಯವನ್ನೂ ತೂಗಿ ನೋಡಿ, ಬರಲಿರುವ ಲಾಭವನ್ನು ಪರಾಮರ್ಶಿಸಿ, ತೊಡಗಬೇಕು. (೪೬೧)

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.   (௪௱௬௰௨ - 462)
 

ಒಳ್ಳೆಯ ಒಡನಾಟವನ್ನು ಆಯ್ದುಕೊಂಡು, ಮಾಡುವ ಕೆಲಸದ ಬಗ್ಗೆ ವಿವರವಾಗಿ ಆಲೋಚಿಸಿ ತೊಡಗುವವರಿಗೆ ಕಷ್ಟಸಾಧ್ಯವಾದ ಸಂಗತಿ ಎಂಬುದೊಂದೂ ಇಲ್ಲ. (೪೬೨)

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.   (௪௱௬௰௩ - 463)
 

ತಿಳಿದವರು ಮುಂದೆ ಬರಲಿರುವ ಸಿರಿಯನ್ನು ಬಯಸಿ, ಕೈಯಲ್ಲಿರುವ ಬಂಡವಾಳವನ್ನೇ ಹಾಳುಮಾಡಿಕೊಳ್ಳುವ ಕೆಲಸವನ್ನು (ಎಂದಿಗೂ) ಕೈಗೊಳ್ಳುವುದಿಲ್ಲ. (೪೬೩)

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.   (௪௱௬௰௪ - 464)
 

ಅಪನಿಂದೆಗೆ ಗುರಿಯಾಗುವಂಥ ಕೆಲಸಗಳಿಗೆ ಅಂಜುವವರು, ಆಲೋಚನೆ ಮಾಡದೆ ತಿಳಿವಿಲ್ಲದ ಕಾರ್ಯಗಳಲ್ಲಿ ತೊಡಗುವುದಿಲ್ಲ. (೪೬೪)

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.   (௪௱௬௰௫ - 465)
 

(ಅರಸನಾದವನು) ತಾನು ಕೈಗೊಂಡ ಕೆಲಸದ (ಹೋರಾಟದ) ಉಪಾಯಗಳನ್ನು ಚೆನ್ನಾಗಿ ವಿಚಾರಮಾಡದೆ ತೊಡುಗವುದರಿಂದ, ಹಗೆಗಳ ಪ್ರಾಬಲ್ಯವನ್ನು ನೀರೆರೆದು ಪೋಷಿಸಿದ ಹಾಗಾಗುವುದು. (೪೬೫)

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்   (௪௱௬௰௬ - 466)
 

(ಅರಸನಾದವನು) ಮಾಡಲು ಯೋಗ್ಯವಲ್ಲದನ್ನು ಮಾಡಿದರೆ, ಕೆಡುವನು; ಮಾಡಲು ಯೋಗ್ಯವಾದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡದೆಯೇ ಬಿಟ್ಟರೂ ಕೆಡುವನು. (೪೬೬)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.   (௪௱௬௰௭ - 467)
 

ಆಲೋಚನೆ ಮಾಡಿದ ಮೇಲೇ ಕೆಲಸವನ್ನು ಕೈಗೊಳ್ಳುವ ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬರಬೇಕು. ಮೊದಲೇ ಕೆಲಸ ಮಾಡಲು ನಿರ್ಧರಿಸಿ ಆಮೇಲೆ ಆ ಬಗ್ಗೆ ‘ಆಲೋಚನೆ ಮಾಡೋಣ’ ಎನ್ನುವುದು ದೋಷವೆನಿಸುವುದು. (೪೬೭)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.   (௪௱௬௰௮ - 468)
 

ಸರಿಯಾದ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಸದ ಪ್ರಯತ್ನವು ಹಲವರು ಬೆಂಬಲವಾಗಿನಿಂತು, ಅದನ್ನು ಪೋಷಿಸಿದರೂ ಫಲಸುವುದಿಲ್ಲ. (೪೬೮)

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.   (௪௱௬௰௯ - 469)
 

ಅವರವರ ಸ್ವಭಾವಗಳನ್ನು ಅರಿತು ಅವರವರಿಗೆ ಒಪ್ಪಿಗೆಯಾಗುವಂತೆ ಕೆಲಸ ಮಾಡದಿದ್ದರೆ, ಒಳ್ಳೆಯ ಕಾರ್ಯಗಳಲ್ಲಿಯೂ ತಪ್ಪು ಸಂಭವಿಸುವುದುಂಟು. (೪೬೯)

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.   (௪௱௭௰ - 470)
 

ಲೋಕವು ತನ್ನೊಂದಿಗೆ ಹೊಂದದುದನ್ನು ಸ್ವೀಕರಿಸುವುದಿಲ್ಲ, ಅದರಿಂದ ನಿಂದೆಯನ್ನು ತಾರದ ಕೆಲಸವನ್ನು ಆಲೋಚಿಸಿ ಮಾಡಬೇಕು. (೪೭೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கரகரப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
தெரிந்து செயல் வகையைத் தேர்ந்திடல் வேண்டும்
தெளிவு பெற்றே எதையும்
செய்திடல் வேண்டும்

அநுபல்லவி:
புரிந்து மக்களாட்சியைப் போற்றிடும் தலைமை
புதுப் புது வகையெல்லாம் சூழ்ந்திடும் நிலைமை

சரணம்:
ஆவதைவிடப் பொருள் அழிவதில் குறையவும்
அதனால் வழி பயக்கும் ஊதியம் நிறையவும்
காவலும் ஏவலும் காணவே மிகுத்தும்
கைமுதல் இழக்காத கருத்தினைப் புகுத்தும்

பரிந்திடும் தன்முயற்சிப் பண்பு கெடாமல்
பகை முளைப் பாத்தியில் வளர விடாமல்
தெரிந்த வினத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றுமில்லை யெனுமாம் குறள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22