தலையில் மயிர் இருக்கும்போது, அது அழகாக இருக்கிறது. தலைக்கும் பாதுகாப்பாகவும் அமைகிறது. வாசனை எண்ணெயை தடவி, வாரி, பேணி, பாதுகாக்கிறோம். ஆனால், அது உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் அதை பொருட்படுத்துவது இல்லை. காணும்போது அருவருப்பு உண்டாகிறது.
அதுபோல, ஒருவன் உயர்வான நிலையில் இருந்து பலருக்கு உதவிகளும் செய்கிறான். மக்களிடையே உயர்ந்து விளங்குகிறான் புகழ் பெறுகிறான், போற்றப்படுகிறான். ஆனால், அவனுடைய நிலையில் இருந்து அவன் தாழ்ந்துவிட்டபோது, எல்லோராலும் இகழப்படுவான். அலட்சியமாக எண்ணப்படுவான்.
தாழ்ந்தநிலை என்பது பணத்தால் அல்ல! குற்றம் செய்தல், கெட்ட நடத்தை, இலிவான செயல், அதிகார மமதை, பிறர் பொருளை அபகரித்தல், பொதுச்சொத்தை திருடுதல் இத்தகையவையால், தாழ்ந்த நிலை இழிந்த நிலையை அடைவது ஆகும்.