முள் மரம் சிறிய செடியாக இருக்கும் போதே அதைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். அப்பொழுது எளிதாக இருக்கும். முதிர்ந்து மரம் ஆகிவிட்ட பின் அதை வெட்ட போகிறவனுடைய கையை அது வெட்டிவிடும்.
அதுபோல, பகையை முற்றவிடாமல் ஆரம்பத்திலேயே வெற்றியினாலோ நட்பினாலோ பகை இல்லாமல் செய்துவிட வேண்டும்.
ஒருவேளை பகை தோன்றி வளர்ந்துவிட்டால், அது மேலும் வளர்ந்துகொண்டே போகாமல் அதை எப்படியாவது முடித்துவிட வேண்டும்.
பகைவனின் பலவீனமான சந்தர்ப்பம், வெற்றி வாய்ப்புக்கு எளிதாக இருக்கும்.