கூத்து தொடங்குவதற்கு முன், ஒவ்வொருவராக வந்து அமர்வார்கள்.
கூட்டம் நிறைந்து காணப்படும். நாடகம், முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து போய்விடுவார்கள்.
அதுபோல, ஒருவனுக்கு பெரும் செல்வமும் வருவது போல வரும். பிறகு கூட்டம் கலைவது போல், வந்த செல்வமும் பல துறைகளில் அழிந்து போய்விடும்.
அதாவது; செல்வக் களிப்பால் தன்னை மறந்து, அறிவை இழந்துவிடாமல், செல்வம் நிலையானது அல்ல என்ற உண்மையை உணர்ந்து செல்வதை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.