ஒருவன் இல்லாத சமயம் பார்த்து, அவனைப் பற்றி பழி கூறித் திரிகின்றவன் எத்தகையவன்?
அவன் பூமிக்குப் பாரமானவன். அந்தச் சதை பிண்டத்தின் உடல் பாரத்தையும் இந்த உலகம் பொறுமையோடு தாங்கிக் கொண்டிருக்கின்றது என்றால், அதுவும் தன் கடமையை கருதித் தான் போலும்.
அதாவது, கோள் சொல்லித் திரிந்தவன், பூமிக்குப் பாரமாக இருக்கிறான். அதனால் மக்களுக்கு தொல்லைதான். ஒரு பயனும் இல்லை என்றாலும் பயன்படும் மக்களை தாங்கிக் கொண்டிருக்கும் உலகமானது, வீணர்களையும் தாங்குவது இயல்பான கடமையைக் கருதியே என்று கூறலாம்.