ஏழ்மை நிலைமையிலிருந்தவனுக்கு எப்படியோ செல்வம் வந்து சேருகிறது.
வேலை கிடைக்காமல் ஏங்கி கொண்டிருந்தவளுக்கு பெரிய வேலை கிடைக்கிறது. சிறிய உத்தியோகத்தில் இருந்தவன் பதவி உயர்வு பெறுகிறான்.
இப்படியாக உயர்நிலையை எட்டியவர்கள் உறுதியான கொள்கையுடன் தங்களுடைய முந்திய நிலை மாறாமல், அடக்கத்தோடு நடந்துகொள்கின்றவர்களை மக்கள் எவ்வாறு மதிப்பார்கள் என்றால்,
தன்னிச்சையாக, கர்வத்தோடு, ஆடம்பரமாக நடந்து கொள்ளாமல் தன் நிலையை உணர்ந்து பணிவுடன் நடப்பவரைக் கம்பீரமான மலையை விடப் பெரிதாக போற்றுவார்கள்.
(இன்றைய நிலைமையில், அத்தகையோர் எத்தனை பேர்?)