புல்லாங்குழலின் இசை இனிமையாக இருக்கிறது. வீணையின் நாதம் பரவசம் உண்டாக்குகிறது என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அப்படிப்பட்டவர் யார்?
குழந்தை பாக்கியம் இல்லாதவர் தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையின் மழலைச் சொல்லான மென்மையான மொழியைக் கேட்டு, இன்பம் அறியாதவர்களே, அவ்வாறு புல்லாங்குழல் இசையும், வீணையின் நாதமும் இனிமையாக இருக்கிறது என்று சொல்லுவார்கள்.
மழலைச் சொற்களைக் காட்டிலும் இனிமை வேறு உண்டோ?