නො මනා පැවැත්ම

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.   (௨௱௭௰௧ - 271)
 

කපටි තවුසාගේ- නො මනා හැසිරීම දැන පස් මහ බූතයෝ - සිනාසෙති ඔහු තූළ ලැගූම් ගෙන (𑇢𑇳𑇰𑇡)

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.   (௨௱௭௰௨ - 272)
 

තමාදත් වැරදි- තම සිත තූළෙහි වේ නම් අවකාශය උසට - පෙනුම තිබුනත් කිමද ? ඇතිපල (𑇢𑇳𑇰𑇢)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.   (௨௱௭௰௩ - 273)
 

තවුස් දම් නොමැතිව - තවුසන් බලය ඇඟවුම් දිවිසම පෙරව ගත් - එළදෙනක් තණ කෑම වැනිවේ (𑇢𑇳𑇰𑇣)

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.   (௨௱௭௰௪ - 274)
 

සැඟවී පැවිද්දෙහි- අදහම් කෙරුම තවුසා පඳුරට මුවා වී- වැදි තෙමේ බඳිනු වැනි විහඟූන් (𑇢𑇳𑇰𑇤)

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.   (௨௱௭௰௫ - 275)
 

රාගයක් නැති යයි - කියන්නන්ගේ නොමනා හැසිරීමෙන් අහෝ ෟ - අහෝ ෟ කියවෙන පරිදි දුක් එයි (𑇢𑇳𑇰𑇥)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௨௱௭௰௬ - 276)
 

කෙලෙසුන් දුරු නොකර - දුරු කළ ලෙසට අඟවා දිවි ගෙවන තවුසන් - පමණ නපුරෝ නොමැත ලෙව්හි (𑇢𑇳𑇰𑇦)

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.   (௨௱௭௰௭ - 277)
 

පිටතින් එම පෙනුම - ගැනුනත් පැහැය ඔලිඳක ඇතූළත ඔළිඳ ඇස- මෙන් කළුව ඇති අයත් ඇත ලොව (𑇢𑇳𑇰𑇧)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   (௨௱௭௰௮ - 278)
 

සිත කෙලෙසුන් පිරී - තවුස් වෙස් ගෙන සැඟ වී හැසිරෙන වක තපස්- ගූණය ඇත්තෝ බොහෝ වෙති ලො ව (𑇢𑇳𑇰𑇨)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.   (௨௱௭௰௯ - 279)
 

නැමුණු වෙණ මිහිරිය - උදු හී තලය නපුරු ය කිරියෙන් මිස එමෙන් - උදක් පෙනුමෙන් ගැනුම නොයෙදේ (𑇢𑇳𑇰𑇩)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.   (௨௱௮௰ - 280)
 

සුදනන් නිගා කළ - දුසිරිත් මුදා හැරියොත් දළ මඩුලු හිස මුඩු - දෙකින් කිසි උවමනාවක් නැත (𑇢𑇳𑇱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேவமனோகரி  |  Tala: ஆதி
பல்லவி:
வீணில் மயங்காதே - மனமே
வெறும் வெளித்தோற்றத்தில்
பெறும் மதியை இழந்தே

அநுபல்லவி:
காணும் சின்னங்கள் பூணும் அணிபணிகள்
மாணல்ல மனிதர்க்கு
மனத் தூய்மையே வேண்டும்

சரணம்:
வஞ்ச மனமுடையோர் பொய்யொழுக்கமானத்து
வானுயர் தவக்கோலம் கொண்டாலும் பயன் ஏது
நஞ்சினுமே கொடிய நெஞ்சிரக்கமில்லாதார்
நடிப்புத் துறவைக்கண்டே ஞானிகள் இவர் என்று

மறைந்து புதரில் வேடன் வலைவீசி நிற்பதுபோல்
வலிவு இல்லாத பசு புலித்தோலைப் போர்த்தது போல்
நிறைந்த சடை முடியால் நீண்ட தாடி அங்கியால்
கரந்துயிர் பிழைக்கின்ற கபடர்களை அணுகி

அம்பு நேராயினும் அதன் தன்மையோ கொடிதாம்
யாழின் கொம்புதான் வளைவாயினுமே இனிதாம்
அம்புவியில் இவைபோல் அவரவர் செயல் பண்பாய்
அமைவது காட்டும் குறள் அறிவு பெற்றே தெளிவாய்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22