හිඟමන

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.   (௲௫௰௧ - 1051)
 

සුදුස්සන් දුටු තැන - සිගමන් යැදිය යුතු වේ සැඟවීම ඔවුනට - විනා තමහට නිගා නො ම වේ (𑇴𑇮𑇡)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.   (௲௫௰௨ - 1052)
 

දුක නැතිව ඉල්ලූ - දැය ලැබේ නම් සිඟමන ඉල්ලන යදි දනට - මෙලොව ඒ හැර සැපක් නැත වෙන (𑇴𑇮𑇢)

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.   (௲௫௰௩ - 1053)
 

නො සඟවන ගුණයත් - දීමෙහි ඇති යුතුකමත් දත්තවුන් අබියස - සිඟීමත් ලස්සණය ගෙණ දෙයි (𑇴𑇮𑇣)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.   (௲௫௰௪ - 1054)
 

සිහිනෙන් පමණවත් - සඟවාලීම හුරු නැති සුදනන්ගෙන් සිඟා - යැදුම දීමක් හා සමානයි (𑇴𑇮𑇤)

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.   (௲௫௰௫ - 1055)
 

නො සඟවන සත් දන - ලොව ඇති නිසා විය යුතු ගෙ දොරට සිඟා ගොස් - නො ඉල්ලා බලා ගෙන සිටුනේ (𑇴𑇮𑇥)

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.   (௲௫௰௬ - 1056)
 

ගති ඇති නො සඟවන - සුදනන් දුටුව කෙණෙහී සිඟන දන සිත දුක් - මුළුමණින් එකවරම නැති වේ (𑇴𑇮𑇦)

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.   (௲௫௰௭ - 1057)
 

නින්දා අපහාස - නො කරම දුටුව දෙන දන සිඟන දුක නැති වී - සොම්නසින් හද ඉපිල යාවි (𑇴𑇮𑇧)

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.   (௲௫௰௮ - 1058)
 

නො මැති සඳ ලෙව්හී - යදි දන සිඟා වඩනා ලො වැසි හැම දෙනා - තැනුව රූකඩ පරිදි හැසිරෙත් (𑇴𑇮𑇨)

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.   (௲௫௰௯ - 1059)
 

දන් දීමට කැමති - දන් දෙන ඇත්තවුන්හට සිඟන දන නැති නම් - කෙසේ යස ඉසුරු ඇති වේවි ද? (𑇴𑇮𑇩)

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.   (௲௬௰ - 1060)
 

යදි දන කිසි විටෙක - කෝපය නො ගත යුතු වෙයි තම දිළිඳුතාවය - සැබෑ නිදසුනි එබඳු ගුණයට (𑇴𑇯)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாரமதி  |  Tala: ஆதி
பல்லவி:
இன்மையைத் தீர்க்கும் குடிப் பிறந்தோயே!
இரவும் இனிதாகவே இசை வளர்த்தாயே!

அநுபல்லவி:
முன்பு வறுமைத் தீயில் மூழ்கி நொந்தோரை
அன்புடனே எடுத்தாய்
அரவணைத்தாய் காத்தாய்!

சரணம்:
உண்ணவரும் வண்டினத்தின் வண்ணமலர்த் தேனாவாய்
ஊட்டவரும் கன்றுகட்கும் உள்ளமகிழ் தாய் போல்வாய்
எண்ணமெல்லாம் நிறையும் இரவலர் இன்பம் நீ
ஏற்றதும் துன்புறாமல் ஈந்தருளும் செல்வம் நீ

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தாற் போலெனும் குறள் கூறும்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப் பிடும்பை
எல்லாம் ஒருங்கே கெடும் நல்லாளின் பார்வை பெறும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22