සිතා ශෝකවීම

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.   (௲௨௱௧ - 1201)
 

සිතුවත් නොකඩවා - මහත් සැපතකි සතුටකි නිරත වන කාමය - මිහිර රා බීමටත් වැඩියෙන් (𑇴𑇢𑇳𑇡)

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.   (௲௨௱௨ - 1202)
 

ඇලුමැති අය සිතන - දතරත් සිඳේ නම් දුක මිහිර දෙන කාමය - කවර අයුරින් බැලුව මිහිරිය (𑇴𑇢𑇳𑇢)

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.   (௲௨௱௩ - 1203)
 

පිවිසී සිතන්නට - සමහර විටක නො සිතයි කිවිසෙන්ට අවුදින් - නැවැත්වෙන්නේ එයයි හේතුව (𑇴𑇢𑇳𑇣)

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.   (௲௨௱௪ - 1204)
 

මගේ සිත නිතරම - නවාතැන වෙයි ඔහුටම එලෙසම ඔහු සිතෙහි - මට ත් ඉඩ සැලසුනා වත්දෝ (𑇴𑇢𑇳𑇤)

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.   (௲௨௱௫ - 1205)
 

ඔහු සිත මුරකරයි - ම සිත එහි යාමක් නැත මසිතට නිතර එන - මුරකාර ඔහු, ඔහුට නොපෙනෙද ? (𑇴𑇢𑇳𑇥)

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.   (௲௨௱௬ - 1206)
 

ඔහු සමග පළමුව - එක්වීම සිහිවීමෙන් ජීවත් වුනා මිස - නැතොත් ජීවත් වන්නේ කෙලෙස ද? (𑇴𑇢𑇳𑇦)

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.   (௲௨௱௭ - 1207)
 

අමතක කළා නම් - මට කුමක් සිදුවේවි ද ? නො දත් අමතක බව - සිතන මගෙ සිත දවා ගෙන යයි (𑇴𑇢𑇳𑇧)

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.   (௲௨௱௮ - 1208)
 

මෙනෙහිවත් අපමණ - ඔහු සිත බිඳත් නො කිපේ පෙම්වතුගෙ කරුණා - ගුණය එපමණමත් විසාල ද ? (𑇴𑇢𑇳𑇨)

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.   (௲௨௱௯ - 1209)
 

වෙනසක් නැතැයි බිණු - පෙම්වත ඇල්ම නැතිකම වැඩිදුරටත් සිතා - වටින මගෙ පණ කෙන්ද වැනසෙයි (𑇴𑇢𑇳𑇩)

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.   (௲௨௱௰ - 1210)
 

අතහැර ගිය මගේ - පෙම්වතු නො දැක නිදි නෑ හදේ ෟ ඔබ යනු මැන - සිහිනයෙන් මට ඔහු දකිත හැක (𑇴𑇢𑇳𑇪)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: புன்னாகவராளி  |  Tala: ஆதி
தலைவன்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - நண்பா
கள்ளினும் காமம் இனிது

அள்ளி அணைத்தாள் இன்பம் அழகு மயிலாள் இன்பம்
அத்தனையும் நினைப்பில் ஆழப்பதிந்த இன்பம்

தலைவி:
கள்ளினும் காமம் இனிது - தோழி
காணாத நாளும் கொடிது

உள்ளத்தில் உள்ளவர்பால் நானும் உள்ளேனோ
உயிரும் உடலும் ஆனோம் என்ற சொல் வீணோ

கொஞ்சும் கிளியே என்றார் குயிலே மயிலே என்றார்
குலவியே எனை அணைந்தார்
கூடிய நாளை எண்ணின் வாடிய என்னுள்ளமும்
குளிர்ந்து மெய் சிலிர்க்குதடி
அஞ்சல் என்று சொன்னவர்தான் நெஞ்சில் இடம் கொண்டவர்தான்
ஆனாலும் எனைப் பிரிந்தார்
அன்னவரைக் கண்ணெதிரில் காணும் வரை தண்மதியே
அகலா திருக்க நீ வாழியவே

இருவரும்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

தலைவி:
நினைத்தவர் போன்று நினையார் கொல் தும்மல்
சினப்பது போன்று கெடும்

தலைவன்:
நீரினுள் மூழ்கினும் நீலக் குன்றெறினும்
நேரிழை பிரிவு சுடும்

தலைவி:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தும்
காதலர் செய்யும் சிறப்பு

தலைவன்:
இன்னலை நீக்கும் அந்தக் கன்னலை எண்ணும்தொறும்
என்னுள்ள மெல்லாம் இனிப்பு




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22