සබවස

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.   (௨௱௯௰௧ - 291)
 

යම්කිසි විදියකින්- කිසිකල කිසිම කෙනෙකූට නරක පල නොම දෙන- සැබැ කියමන සැබව නම් වේ (𑇢𑇳𑇲𑇡)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (௨௱௯௰௨ - 292)
 

වරදක් නොවන ලෙස- හොඳ පල විපා දේ නම් එම පල ලබනු වස් - කියන බොරුවත් සැබව සමවේ (𑇢𑇳𑇲𑇢)

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   (௨௱௯௰௩ - 293)
 

තමා සිත දත් දේ - කිසිවිට නොකරන්න බොරු කළහොත් එතැන් සිට - තමා තම සිත දවයි නිතරම (𑇢𑇳𑇲𑇣)

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (௨௱௯௰௪ - 294)
 

කෙනෙකූ තම සිත දත් - බොරු නැතිව හැසිරේ නම් එබඳු ගූණවතූනට- සෑම සාදුහු ගරු කෙරෙත් මැ යි (𑇢𑇳𑇲𑇤)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.   (௨௱௯௰௫ - 295)
 

තම සිතට එකඟව - නිති සබවස කියා නම් එය තපසත් දනන් - දෙකම රැකූමට වඩා උතූමැ යි (𑇢𑇳𑇲𑇥)

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.   (௨௱௯௰௬ - 296)
 

බොරු නොකිමට සම - මහත් යසසෙක් වෙන නැත එම උතූම් ගූණයම- දැහැමි බව දෙයි සෑම විටකම (𑇢𑇳𑇲𑇦)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.   (௨௱௯௰௭ - 297)
 

ෆබොරු නොකියන ගූණය- සැබෑකර හැසුරුණි නම් වෙන අනික් දහමෙක්- නොකර සිටියත් නොවේ නරකක් (𑇢𑇳𑇲𑇧)

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.   (௨௱௯௰௮ - 298)
 

සිරුරෙහි නිමල බව - සිලිලෙන් ගෙනේ නියදම සිත තූළ නිමල බව- සැබෑ වදනින් දිසේ හැමවිට (𑇢𑇳𑇲𑇨)

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.   (௨௱௯௰௯ - 299)
 

සැම දහමකින් එන- එළිය එළියක් නොම වේ සාදුනට එළිය- බොරු නොකිමෙන් එන එළිය වේ (𑇢𑇳𑇲𑇩)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.   (௩௱ - 300)
 

අප සැබෑ ලෙස දුටු- දේවල් අතර බැලුවොත් සැබවට වඩා හොඳ - යමක් ලෝ තූළ නොවේ සැමවිට (𑇣𑇳)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காமவர்த்தினி  |  Tala: ஆதி
பல்லவி:
வாய்மையைக் காப்பதே மாண்புடைமை - நம்
வண்டமிழ்க் குறள் சொல்லும்
இதன் அருமை பெருமை

அநுபல்லவி:
தூய்மையாய் உள்ளத்தைத் துலக்கிடும் வாய்மை
தோன்றும் நல்வாழ்க்கையிலே
சொல்லும் செயலுமாக

சரணம்:
பட்டம் பதவி பொருள் கிட்டும் என்றாலும்
பைம்பொன்னணி இழையார் பக்கம் வந்தாலும்
சுட்டுக்கொல்லும் துப்பாக்கி முன்பு நின்றாலும்
துன்பத்திற்கஞ்சாமலே துணிவும் கனிவும் கொள்ளும்

"பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றென" முழங்குவோம்
பொய்யாமை யன்னதொர் புகழ்ச்செல்வம் உண்டோ
பொருந்தும் அறங்களெல்லாம் தருவதும் ஈதன்றோ




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22