විමසා තීරණය කිරීම

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.   (௫௱௧ - 501)
 

දම් අරුත සැප බිය - සතරෙහි තතූ පිරික්සා නිල දරයන් ගැනුම - යෙහෙකි ඇම දැන ඇඳින විමසා (𑇥𑇳𑇡)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.   (௫௱௨ - 502)
 

උසස් යැයි සම්මත - වරදින වැළකූණ වූ නො කැලැල් ගූණවතා - සුදුස්සෙකි නිලයක් දැරුම් වස් (𑇥𑇳𑇢)

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.   (௫௱௩ - 503)
 

අනගි සිප්සත දත් - නිවැරදි මහත් නැණවත් දොස් නැතිවිය නොහේ - විමසුවොත් ඒ උගත් වියතූන් (𑇥𑇳𑇣)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (௫௱௪ - 504)
 

ගූණ අගූණ මේ දෙක - දෙ පසින් තබා විමසා වැඩි වන පස අනුව - සුදුසු නුසුදුසු බවට තේරේ (𑇥𑇳𑇤)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.   (௫௱௫ - 505)
 

ඔවු නොවුන් කිරියම - උරගල බවට හරවා පහත් හෝ වැදගත් - බවට තෝරනු ලබන්නේ වේ (𑇥𑇳𑇥)

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.   (௫௱௬ - 506)
 

නිගාවට බිය නැත - නෑයින් නොමැති ඇත්තේ නිලදරයන් ලෙසට - තෝරනට නො වටිත් ඒ බන්දෝ (𑇥𑇳𑇦)

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.   (௫௱௭ - 507)
 

නෑ හිතවත් කමට - ඉමහත් පිරුණු අදරින් දැනුම් නැණ නැත්තන් - තේරිම ලොකූ මෝඩකම මැයි (𑇥𑇳𑇧)

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.   (௫௱௮ - 508)
 

නො විමසා අග මුල - කෙනෙකූ ගැන කර තීරණ ගත හොත් පරපුරම - නොවේ මුළු රට දුකට පත්වෙයි (𑇥𑇳𑇨)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.   (௫௱௯ - 509)
 

නො විමසා කිසිවිට - තෝරා නොගන් කිසිවකූ හැකිකම් සෙවියයුතූ - සොඳින් තෝරා ගැනිමෙන් පසු (𑇥𑇳𑇩)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.   (௫௱௰ - 510)
 

නො විමසා ගැනුමත් - පිළිගෙන දෙවනු සැකයත් යන මේ ගූණ නිසා - නො වැනසෙන දුක් ගැහැට ගෙනදේ (𑇥𑇳𑇪)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: கண்ட ஆதி
கண்ணிகள்:
தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி

ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா

பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி

பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை

பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22