උසස් කූලයෙහි ඉපදීම

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.   (௯௱௫௰௧ - 951)
 

උදු බවත් හිරියත් - සැබවින් පහළ වීමක් කූලවතූන් වෙත මිස - නො මැත කූලහීනයන් කෙරෙහි (𑇩𑇳𑇮𑇡)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.   (௯௱௫௰௨ - 952)
 

හික්මීම සබවස - හා හිරිය යන මේ ගූණ පතිත වෙත් ඇම විට - කූලවතූන් ළඟ සදා කල්හි (𑇩𑇳𑇮𑇢)

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.   (௯௱௫௰௩ - 953)
 

සිනා මුසු මුහුණත් - පිය වදන දානය හා නිගා නො කරන බව - සුදන සතූ ගූණ සතර අයුරුයි (𑇩𑇳𑇮𑇣)

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.   (௯௱௫௰௪ - 954)
 

එක පිට ගොඩ ගසා - කෝටි ගණනින් සම්පත් ලැබුණ ද සත් දනෝ - නොම කෙරෙති නීච වැඩ කිසි කල (𑇩𑇳𑇮𑇤)

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.   (௯௱௫௰௫ - 955)
 

අඩු වුව යස ඉසුරු - වැදගත් පරපුරින් එන කූලවත්තූ කිසිකල - යහ ගූණින් හීන මොන වෙත් මැයි (𑇩𑇳𑇮𑇥)

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.   (௯௱௫௰௬ - 956)
 

හිත කැමති විසුමට - කූලවත් දනට එක් වී කූලවතා වංචා - සහිත වරදින් සදා වෙන් වෙයි (𑇩𑇳𑇮𑇦)

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.   (௯௱௫௰௭ - 957)
 

කූලවතූන් වෙත ඇති - වරදක් විනම් සුළු වුව අහසෙහි සඳ ලපය - වගේ හොඳ හැටි පෙනෙයි හැමටම (𑇩𑇳𑇮𑇧)

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.   (௯௱௫௰௮ - 958)
 

නො සිතයි නම් දියුණ - පරපුරැ ජනිත පවුලේ ඔහු ගැන සැක කෙරේ - කෙබඳු පවුලෙක බිහිවුනේ දැ යි (𑇩𑇳𑇮𑇨)

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.   (௯௱௫௰௯ - 959)
 

බිම සිටවූ ඇටය - හඳුනන පරිදි පැලයෙන් කූලවත් බව දැනේ - මුවින් ගිලිහෙන වචන ඇසුරෙන් (𑇩𑇳𑇮𑇩)

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.   (௯௱௬௰ - 960)
 

හොඳකම රැකෙන්නට - විලිය රැක ගත යුතූ සේ කූල රැක්ම සඳහා - විනීතව හැසිරීම විය යුතූ (𑇩𑇳𑇯)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சக்கரவாகம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை - இது
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை
ஒப்புரவாண்மையுடன் செப்பமும் நாணும் கொண்ட

அநுபல்லவி:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார் என்று செல்லும் பொருள் நன்று காணும் குறள்

சரணம்:
மேலும் மேலும் துன்பம் வந்தாலும் வீழ்ச்சில்லார்
விண்ணில் உலாவும் மதி தன்னிலும் மேன்மையுள்ளார்
பாலும் கரும்பும் பொன்னும் சந்தனமும் போல்வார்
பண்பினோடு பழம் பெருமை வாய்ந்த குடி
வண்மை ஏழ்மையிலும் நீங்கிடாத படி

தொகையாகவே அடுக்கி ஒரு கோடி தந்தாலும்
தோன்றும் தன் குடிக்கென்றும் குன்றுவ செய்தல்இலர்
நகை ஈகை இன்சொல் இகழாமையே போற்றுவார்
நலம் விளங்கிடவும் குலம் விளங்கிடவும்
நாணயத்தினுடன் நல்லடக்கம் மிகும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22