භය ජනක දේ නො කිරීම

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.   (௫௱௬௰௧ - 561)
 

සම මෙත් සිත ඇතිව - විමසා කරන වැරදි නැවත නො කරණ ලෙස - සුදුසු දඩුවම් දෙවත් නරනිඳු (𑇥𑇳𑇯𑇡)

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.   (௫௱௬௰௨ - 562)
 

පැහැදිලිව විමසා - තද බව තදින් පෙන්වා ලිහිල් දඩුවම් දෙන - රජුන් සතූ දන සදා පවතී (𑇥𑇳𑇯𑇢)

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௩ - 563)
 

වැසියනට බිය දෙන - පාලනය ගෙනයන රජු නපුරුකම් හමුවේ - නො අනුමානව වහා වැනසෙත් (𑇥𑇳𑇯𑇣)

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.   (௫௱௬௰௪ - 564)
 

රජ නපුරෙකැයි යන - වදන් කියවන නරනිඳු නිසා රට වැසියෝ - කිපෙත් ඉන් එම රජුද වැනසේ (𑇥𑇳𑇯𑇤)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.   (௫௱௬௰௫ - 565)
 

පිය කර මුහුණ නැති - බැහැ දක්නට ද අපහසු රජුගේ මහ දනය - බිය දෙවයි අවතාරයක් මෙන් (𑇥𑇳𑇯𑇥)

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.   (௫௱௬௰௬ - 566)
 

ඇති රුදුරු වදනැති - දයාවක් නැති රජුගේ දනය වැනසී යයි - දිගූ කලක් නො රැඳේ නොපැවතේ (𑇥𑇳𑇯𑇦)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.   (௫௱௬௰௭ - 567)
 

පමණට වැඩි නපුරු - වදනත් දඩුවමත් දෙක පීරට සමානයි - ගෙවන නිරිඳුගෙ රාජබලතල (𑇥𑇳𑇯𑇧)

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.   (௫௱௬௰௮ - 568)
 

ඇමතින් නො විමසා - කෝපාවිෂ්ට විමෙන් රැවුමෙන් ගෙරවුමෙන් - තමා සතූ යස ඉසුරු සුන්වෙයි (𑇥𑇳𑇯𑇨)

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.   (௫௱௬௰௯ - 569)
 

යුද එනවිට නො රැක - ඉඳුමෙන් නො සැළකිළි වී බියක් වන් කෙනෙහි - රජුත් රජ පරපුරත් වැනසෙත් (𑇥𑇳𑇯𑇩)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.   (௫௱௭௰ - 570)
 

නූගතූත් සමඟින් - ගෙන යන නපුරු පාලන විනා වෙන අනිකක් - උදක් පොළවට නොමැත බරවී (𑇥𑇳𑇰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாரங்கா  |  Tala: ஆதி
பல்லவி:
அம்பை விட்டு பால் கறப்பதா?
ஆகா தென்றாலும்
அஞ்சிட வெங்கோல் பிடிப்பதா?

அநுபல்லவி:
அம்பெதற்குக் கன்றை விட்டால்
பால் கெடுக்கும் தானே
அச்ச மின்றி மக்கள் வாழ
அன்பு செய்வீர் கோனே

சரணம்:
மண் குதிரையை நம்பி ஆற்றினில் இறங்கும்
மதிகெட்ட சேவகரால் எதுதான் துலங்கும்?
கண்கெட்ட பின்னரோ கதிரவன் வணக்கம்
கருதும் வெம்போர் வருமுன் காப்பதே இணக்கம்

தான் செய்த குற்றத்திற்குப் பிறரையே கடிந்தும்
தன்மையிலாக் கொடிய பேயெனத் திரிந்தும்
கோன் வெருவந்த செய்யின்குடிகள் உளம் துடிக்கும்
குமுறும் எரிமலையாய் ஒரு நாளது வெடிக்கும்

கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் நெடுஞ் செல்வம்
நீடின்றி யாங்கே கெடும் என்றே குறளும் சொல்லும்
படும் துன்பம் நீக்கும் முறைபார்த்தே மெல்ல எறிக
பண்புறும் கண்ணோட்டத்தின் பாங்கினையும் பெறுக




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22