සූදුව

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931)
 

නො කැමති විය යුතූය - සුදුව දිනිය හැකි වුව දිනුව දැය සම වේ - බිලිය සමගින් ගිලූ ඇමකට (𑇩𑇳𑇬𑇡)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932)
 

සියයක් නැති කරන - දිනුමක් පිණිස සිතමින් දිවි ගෙවුමක් ඇද්ද ? - සුදු කරුවන් ලබන යහපත් (𑇩𑇳𑇬𑇢)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.   (௯௱௩௰௩ - 933)
 

දනය ගොස් අනුනට - එක් වෙයි නිරායාසෙන් නො කඩවා සොලවා - කවඩි දැමුමෙන් හිත කැමති වී (𑇩𑇳𑇬𑇣)

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.   (௯௱௩௰௪ - 934)
 

දිළිඳු බව ගෙන දෙන - යස ඉසුරු ඇම සුන් වී දුක දෙවන සුදුව - විනා අනිකක් ලොවේ වෙන නැත (𑇩𑇳𑇬𑇤)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935)
 

සූදුව සූදු පළ - සහ කවඩින්ට ඇලුමැති දද දනෝ දිවිහිමි - දිළිඳු බව පහ නොකර දුක්වෙති (𑇩𑇳𑇬𑇥)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.   (௯௱௩௰௬ - 936)
 

සූදුව නමැති වූ - මූ දේවියට එක්වූ දද දනෝ දුක මිස - සැපක් නො ලබති ගියත් පණනල (𑇩𑇳𑇬𑇦)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.   (௯௱௩௰௭ - 937)
 

රෑ දවල් නැතිව - යෙදුනෝ සූදු කෙළියෙහි හිත පුරුදු දනයත් - ගූණය මේ දෙක සදා වනසත් (𑇩𑇳𑇬𑇧)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.   (௯௱௩௰௮ - 938)
 

කරුණාව සැබි බව - සම්පත දනය වනසා ගැහැට දුක් කරදර - දෙවන්නේ සුදුවයි නිතැතින් (𑇩𑇳𑇬𑇨)

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.   (௯௱௩௰௯ - 939)
 

ආහාරය යසස - ඉගෙනුම දනය ඇඟලුම් නො ලබත් දද දනෝ - සදා දූ කෙළියට ඇලුම් ඇති (𑇩𑇳𑇬𑇩)

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.   (௯௱௪௰ - 940)
 

එන දුකක් පාසා - දිවිය සැප පතනා මෙන් පැරදුමක් පාසා - සුදුවට වඩ වඩා ලැදිවෙත් (𑇩𑇳𑇭)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஸ்ரீ ரஞ்சனி  |  Tala: ரூபகம்
பல்லவி:
சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை

அநுபல்லவி:
தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்

சரணம்:
பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22