குன்றிமணி சிவப்பு நிறமாக, மினுமினுப்பாக இருக்கும். ஆனால் அதன் மூக்கு மட்டும் கறுத்திருக்கும். சிவப்பில் கறுப்பு பளிச்சென்று தெரியும்.
அதுபோல, உடல் முழுவதும் தவக்கோலமாக இருந்தாலும், உள்ளம் இருண்டு வஞ்சகம் நிறைந்தவர்களாகப் போலித்துறவிகள் இருக்கிறார்கள். அவர்கள் கொடியவர்கள்.
அத்தகையவர்கள் வெளித்தோற்றத்தில் உத்தமர்களைப் போலவும், உண்மை பேசுபவர்கள் போலவும், தவசீலர்கள் போலவும் நடிப்பார்கள்.
அந்தப் பொய் வேடத்தைக் கண்டு, ஏமாருபவர்கள் பலர். வேடதாரிகளிந் வஞ்சத்தை, உடல் தோற்றத்தால் அறிய முடியாது. ஒழுக்கத்தின் அளவில்தான் காணமுடியும்.