Raga: சங்கராபரணம் | Tala: சாப்பு பல்லவி:வரைவின் மகளிர் நேசம் - எவர் கொண்டாலும்
வருமே கைப் பொருள் நாசம்
அநுபல்லவி:கரையேற முடியாது கடமையும் புரியாது
காலமெல்லாம் அழுந்திக்கிடக்கும் கீழோர் நரகாம்
சரணம்:சாயும் பொழுதைப் பார்ப்பார் - முகம்மினுக்கித்
தம்மை விற்றும் பொருள் சேர்ப்பார்
மாயமகளிர் இவர் வரிசை கொண்டழைத்தாலும்
ஆயும் நல்லறிவினர் அணுகாரே ஒருக்காலும்
பொருட் பெண்டிர்ப் பொய்மை முயக்கம் - இருட்டறையில்
புல்லும் பிணத்தை நிகர்க்கும்
"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் என்றும்
திருநீக்கப் பட்டவர் தொடர்" பென்றே குறள் சொல்லும்