Raga: கேதாரே கௌளம் | Tala: ஆதி பல்லவி:மற்றவர்பொருள் மேல் இத்தனை மோகம் கொண்டு
மதி தடுமாறுவதேன் மனமே!
அநுபல்லவி:உற்றநின் வாழ்க்கையில் ஒருவர் பொருள் கவர்ந்தே
உயிர்வாழ நினைப்பதும் உனக்குப் பெருமையோ சொல்
சரணம்:"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்தங்கே திரு" என்றே வள்ளுவர் கூறும்
சிறந்த மொழி இதை உன் சிந்தையில் பதிப்பாய்
தீயதாம் பிறர் பொருள் ஆசையை அறுப்பாய்"
ஊரார் உழைப்பைக்கொள்ள ஓயாத நினைப்பு
உரிமை இல்லாததில் உனக்கென்ன முனைப்பு
நேராக விளங்கிடும் நீதியின் தொகுப்பு
நீ பயில்வாய் முன்னே திருக்குறள் வகுப்பு