Raga: மத்தியமாவதி | Tala: ஆதி பல்லவி:இடுக்கண் வருங்கால் நகுக - மனமே
இடுக்கண் வருங்கால் நகுக
அடுத்தூர் வதும் அதனை
ஒப்பதில்லை அறிக
அநுபல்லவி:அடுக்கியே வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் எனும் குறள்வழி நின்றே
சரணம்:தடைப்பட்ட இடமெல்லாம் தயங்காமலே கடக்கும்
தன்னாற்றல் மிக்க இரு பகடுகள் போல் நடக்கும்
இடைவிடா முயற்சியை இதயம் நிறையக் கற்போம்
எதற்குமே அஞ்சிடாமல் இமயமலைபோல் நிற்போம்
தன்னாட்சியால் விளங்கும் நாட்டின் பொதுச் சேவை
தாங்கிட நிற்பவர்கள் சாலவும் தேவை
இன்னாமையே இன்பம் என்னும் அவர் பிறப்பு
ஒன்னாறாம் விழையவே உண்டாக்குமாம் சிறப்பு